பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸின் தீவிர ஆதரவாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், கட்சியின் தற்போதைய தலைவர் அன்புமணி ராமதாஸை தலைவராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து, புதிய கட்சி தொடங்குவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தனது ஆதரவாளர்களுடன் நடத்திய முக்கிய ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எப்போதும் தனக்கு மருத்துவர் இராமதாஸ் மட்டுமே கடவுள் என்றும், அவரது வழியையே தான் என்றும் பின்பற்றி நடக்கப்போவதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அதேவேளையில், அன்புமணியின் தலைமைக்குக் கீழ் செயல்பட விரும்பவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்த அருள், தங்களது அடுத்தகட்ட அரசியல் பாதை என்ன என்பது குறித்து ஆதரவாளர்களுடன் தீவிரமாக விவாதித்து வருவதாகவும், அதுகுறித்த இறுதி முடிவை மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…