அவசரப்பட்டு தனிநபர் கடன் வாங்கிவிட்டு வருந்துபவர்களுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி ‘கூலிங் ஆஃப்’ எனும் அரிய வாய்ப்பை வழங்குகிறது. கடன் தொகை உங்கள் வங்கி கணக்கிற்கு வந்த பிறகு, அதன் வட்டி அதிகம் என்றோ அல்லது தற்போது அந்த பணம் தேவையில்லை என்றோ நீங்கள் கருதினால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை ரத்து செய்யலாம்.
டிஜிட்டல் முறையில் கடன் வாங்குபவர்களுக்கு குறைந்தது ஒரு நாள் அவகாசம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என விதிகள் உள்ளன. இந்த சலுகை மூலம் அதிகப்படியான அபராத கட்டணங்கள் இன்றி, மிகக் குறைந்த நிர்வாக செலவில் உங்கள் கடன் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும்.
இந்த கால அவகாசத்திற்குள் கடனை ரத்து செய்ய விரும்பினால், வாங்கிய அசல் தொகையோடு அந்த சில நாட்களுக்கான வட்டியை மட்டும் செலுத்தினால் போதுமானது. முன்கூட்டியே கடனை முடிப்பதற்கான (Foreclosure) கூடுதல் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது என்பது கடனாளிகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கிறது.
இருப்பினும், கடன் வழங்கும் நிறுவனங்கள் ஒருமுறை மட்டும் வசூலிக்கப்படும் சிறிய அளவிலான ‘பிராசஸிங்’ கட்டணத்தை எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்த எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிப்பது அவசியம். அவசர முடிவுகளால் நிதி நெருக்கடியில் சிக்காமல் இருக்க இந்தத் திட்டம் ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…