திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், பக்தர்கள் சமர்ப்பித்த பெரும் தொகை வசூலாகியுள்ளது. சபரிமலை ஐயப்பன் சீசன் மற்றும் தொடர் விடுமுறைகள் காரணமாகப் பக்தர்கள் வருகை பன்மடங்கு அதிகரித்ததால், மொத்தம் 4 கோடியே 8 லட்சத்து 43 ஆயிரத்து 113 ரூபாய் ரொக்கமாகக் கிடைத்துள்ளது.
இது தவிர 800 கிராம் தங்கம், 11 கிலோவிற்கும் அதிகமான வெள்ளி மற்றும் சுமார் 574 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளையும் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாகச் செலுத்தியுள்ளனர். மலேசியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணத்தாள்களும் இதில் அடங்கும்.
கோவில் ஊழியர்கள், வங்கிப் பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட இந்தப் பணியில் நவதானியங்கள், பித்தளை வேல் மற்றும் கைக்கடிகாரங்கள் போன்ற பொருட்களும் காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளன. மண்டபத்தில் வைத்துத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட இந்த வருவாய், கடந்த ஒரு மாத காலப் பக்தர்களின் வருகையைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்ததே இந்த வருவாய் உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
மாதவிடாய் காலத்தில் தனது மனைவியை வீட்டிற்குள் அனுமதிக்காமல், காற்று புகாத குறுகிய அறை போன்ற இடத்தில் அடைத்து வைத்து, பாத்திரங்கள்…
கல்லூரியிலிருந்து மனவுடைச்சலோடு வீடு திரும்பிய ஆரியன், தன் பாரத்தைப் பகிர்ந்துகொள்ள குடும்பத்தினரின் அன்பைத் தேடினான். சமையலறையில் இருந்த அம்மாவிடம், "இரண்டு…
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் பட்டப்பகலில் பிரபல ரவுடி ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை…
மதன்னாப்பேட்டை பகுதியில் தனது மகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கூறிய தந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஐதராபாத்தின்…
தமிழ்நாட்டில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும்…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்…