தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப் பிரச்சாரம் பெரும் மக்கள் கடலில் மிதந்தது. சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 கி.மீ தூரம் வரை திறந்த வாகனத்தில் வலம் வந்த விஜய், தனது கட்சியின் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சைகை மூலமாகவும், வேட்பாளர்கள் ரவி மற்றும் விஜயகுமார் ஆகியோரின் கரங்களை உயர்த்திப் பிடித்தும் உற்சாகமாக வாக்கு சேகரித்தார்.
விஜய்யைக் காண்பதற்காகத் திரண்ட தொண்டர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனதால், பாதுகாப்புப் பணியில் இருந்த 800-க்கும் மேற்பட்ட போலீசார் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். தொண்டர்கள் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலைத் தடுப்புகள் மீது ஏறிக்குதித்து ஓடியதால் பதற்றம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், தொண்டர்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிக்குச் சென்றால் மட்டுமே விஜய் உள்ளே வர முடியும் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்த பின்னரே ஓரளவு வழி கிடைத்தது. இருப்பினும் விஜய் வந்தவுடன் தொண்டர்களின் ‘அலப்பறை’ மீண்டும் உச்சத்தை எட்டியது.
ஆவேசமடைந்த தொண்டர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த சால்வைகளை விஜய் மீது வீசி எறிந்தும், கோஷமிட்டும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த அதீதக் கூட்ட நெரிசலில் சிக்கி பலரின் செருப்புகள் சாலைகளிலேயே சிதறிக் கிடந்தன. இந்தத் தள்ளுமுள்ளுவைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டியதில், பிரச்சாரத்திற்கு ஆடியோ அமைத்துக் கொடுத்தவர்களின் நான்கு மைக்குகள் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மைக்குகளைத் திருப்பித் தருமாறு அவர்கள் மேடையிலேயே உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும், கூட்டத்திற்கு வந்த இரண்டு பெண்களின் செல்போன்கள் திருடு போனதால், அவர்கள் கண்ணீருடன் வீட்டிற்குத் திரும்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் இந்த அதிரடி வாகனப் பிரச்சாரத்தால் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளான போதிலும், தவெக தொண்டர்களின் உற்சாகம் அந்தப் பகுதியையே அதிர வைத்தது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…
அண்ணா பல்கலைக்கழக ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்த திமுக அனுதாபி ஞானசேகரன், திடீரென அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருப்பது…