TRENDING
விஜயாவை ஏமாத்த பிராட் வேலையே செய்யும் ரோகினி.. இப்பயாவது இவுங்க சிக்குவாங்களா.. பரபரப்பான திருப்பங்களுடன் ‘சிறகடிக்க ஆசை’..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசிய ஆசை சீரியலில் ஜனவரி 18ஆம் தேதிக்கான எபிசோடுகள் வெளியாகி இருக்கிறது. அதில் விஜயா கொடுக்கும் தொல்லையால் ரோகிணி புது பிரச்சனையில் மாட்டி கொள்கிறார் . ஏற்கனவே பண கஷ்டத்தில் இருக்கும் ரோகினி விஜயாவால் புதிய கடன் வாங்க அது மீனாவின் தம்பிக்கு தெரிய வந்திருக்கிறது இந்த நேரத்தில் இனி இந்த சீரியல் யார் மாட்டப் போகிறார் என்ற எதிர்பார்த்து அதிகரித்து வருகிறது.
ஒரு பக்கத்தில் ரோகினி தனக்கு தாய் மாமாவாக நடிக்க வேண்டும் என்று கறிக்கடைக்காரர் ஒருவரை செட் அப் செய்து வருகிறார்கள் அதே நேரத்தில் மீனாவின் தம்பி வட்டிக்கு பணம் கொடுக்கும் பிசினஸ் செய்வது வீட்டுக்கு தெரியாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இன்று என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா ரோகினி இடம் உங்க அப்பாவை வரச் சொல்லுமா இல்லையென்றால் உன் மாமாவ வந்து பார்த்துட்டு போக சொல்லி அப்பதான் உனக்கு இங்க மரியாதை இருக்கும். நம்ம பொங்கல் திருவிழாவுக்கு கிராமத்துக்கு போறதுக்கு முன்னாடி அவங்கள வரச் சொல்லு என்று சொல்கிறார். இதற்கு ரோகிணி என்ன செய்வது என்று தெரியாமல் வித்யாவிடம் புலம்பி கொண்டு இருக்கிறார்.
அப்போது வித்யா ஒரு யோசனை கூற, இருவரும் கறிக்கடைக்கு போகிறார். அந்த கறிக்கடைக்காரர் தெரு கூத்தில் நடிப்பவர் என்பதால் அவரை வைத்து ரோகிணியின் மாமாவாக நடிக்க வைத்து விடலாம் என்று பேசுகிறார். வித்யா அவரை கூப்பிட்டு கமல் மணிரத்தினம் படத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக அவங்களிடம் ஸ்டைல் அனுப்பி வைத்திருக்கிறேன். அதுக்கு முன்னாடி நீங்க ஒரு வேலை பண்ணனும் என்று சொல்லி ரோகினிக்கு தாய் மாமா நடிக்க வேண்டும் என்ற விஷயத்தை சொல்ல அதற்கு அவர் நான் அப்படியெல்லாம் பொய் சொல்லி நடிக்க மாட்டேன் என்னால் பித்தலாட்டம் எல்லாம் பண்ண முடியாது நான் ஒரு நல்ல நடிகன் என்று மறுக்கிறார்.
அதற்கு வித்யா கமலஹாசன் பட வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது என்று பயமுறுத்த வேறு வழி இல்லாமல் கறிக்கடைக்காரர் பட வாய்ப்புக்காக நடிக்க ஒப்புக் கொள்கிறார். இதை யார்கிட்டயும் சொல்லக்கூடாது என்றும் இது உனக்கும் தெரிய கூடாது என்று தான் எங்க மேனேஜர் சொல்லி இருக்காங்க ஆனா இது ஒரு விதமான ஆடிஷன் உங்களுக்கு தெரியாமலே நாங்க கேமராவை வைத்து நீங்கள் நடிக்கிறதை ரெக்கார்ட் பண்ணுவாங்க அப்படின்னு வித்யா கூற கறிக்கடைக்காரர் நான் நடிக்க ஒப்புக் கொள்கிறேன், நடிப்பில் பீச்சும் தள்ளுகிறேன் என்று சவால் விட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்.
அதனைத் தொடர்ந்து வித்யாவும் ரோகிணியும் பேசிக் கொண்டிருக்கும்போது மாமா மட்டும் வந்த போதுமா சீர்வரிசை செய்யணுமே அதற்கு என்ன செய்வது என்று யோசித்தார்கள். மாமா வந்து மனோஜ்க்கு ஒரு மோதிரமாவது போடணும் அந்த பணத்துக்கு என்ன பண்ணலாம் என்று யோசிக்க ஏற்கனவே வாங்கிய வட்டிக்காரரிடம் மீண்டும் வட்டிக்கு வாங்க போகிறார்கள். பிறகு அவர்கள் ஒரு லட்சம் கடன் வாங்கிட்டு போவதை பார்த்ததும் சத்யாவுக்கு ரோகினி மீது சந்தேகம் வருகிறது.
இவர்கள் அப்பா மலேசியாவில் இருக்காரு; இவங்க பியூட்டி பார்லர் வச்சிருக்காங்க;ஆனால் எதுக்காக இவங்க இப்படி கடன் வாங்கிட்டே இருக்காங்க என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அதற்குள் மீனா தன்னுடைய வீட்டிற்கு வந்து அம்மாவிடம் நீ எதுக்காக அந்த வீட்டுக்கு வந்தீங்க நீங்க அங்க வந்ததுனால தானே ரோகினி கோபப்பட்டு போய்ட்டாங்க என்று கூற, அப்போது அங்கு சத்தியா வருகிறார். உனக்கு முறை செய்கிறது பற்றி நீ ஏற்கனவே சொல்லி இருந்த நான் பணத்துக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணி இருப்பேன் என்று சத்யா சொல்ல அதற்கு மீனா உன் பேச்சு எல்லாம் பார்க்கிறதுக்கு எனக்கு பயமா இருக்கு நீ நல்லபடியா இருக்கணும், பழையபடி எந்த தப்பு தண்டாதே என்று மிரட்டி விட்டு வீட்டிற்கு போகிறார்.
மேலும் , வித்யா கறிக்கடைக்காரருக்கு பணம் கொடுத்து உனக்கு தேவையான துணிகளை வாங்கிக்கொண்டு, அவள் வைத்திருந்ததை எல்லாம் கொடுத்து நீங்க ரோகிணி அவருடைய வீட்டுக்காரர் கொடுக்கணும் சந்தேகம் வராமல் நடிக்கணும் என்று அட்வைஸ் செய்கிறார். இந்த சீரியலில் யார் மாட்டபோகிறார்கள் என்று எதிர்பார்ப்புடன் பார்க்கப்படுகிறது.