Connect with us

CINEMA

விவாகரத்து குறித்து இணையத்தில் முதன்முறையாக மனம் திறந்து பேசிய விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி டி டி… என்ன சொன்னாங்க தெரியுமா?… 

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளியக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. அவருடைய க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் கவரப்பட்ட ரசிகர்கள் இவரை செல்லமாக ‘டிடி’ என்று  அழைக்கின்றனர். திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவற்றின் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்.

   

ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், காபி வித் டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் என்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.  15 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் டிடி விஜய் தொலைக்காட்சியின் செல்லப் பிள்ளையாக வலம் வருகிறார்.

 

சிறுவயதிலேயே சின்னத்திரைக்குள் வந்த இவர் நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார். கடைசியாக சுந்தர்.சி இயக்கிய காஃபி வித் காதல் என்ற படத்தில் நடித்தார்.இவர் தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து 2014ல் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு  இவர் பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் கூட நடித்துள்ளார். இந்த நிலையில் விவாகரத்திற்கு பிறகு இருவரும் தனித்தனியாக தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

அண்மையில் ஒரு பேட்டியில் திருமணம் குறித்து டிடி பேசும்போது, பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் பற்றிய என்னுடைய புரிதல் வேறு மாதிரியாக இருந்தது. இப்போது அது மொத்தமாகவே மாறிவிட்டது. திருமணம் செய்துகொள்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் ஆனால்தான் வாழ்க்கை முழுமை பெறும் என்றெல்லாம் ஒன்று கிடையவே கிடையாது. திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை என பேசியுள்ளார்.

 

Continue Reading

More in CINEMA

To Top