சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், நடிகர் விஜய் குறித்துப் பேசியுள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கத்தி’ திரைப்படத்தின் வெளியீட்டின்போது எழுந்த எதிர்ப்புகளைச் சமாளிக்க, விஜய்யின் மேலாளர் தன்னை அணுகிப் பல கோடி ரூபாய் நன்கொடை தருவதாகப் பேரம் பேசியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அப்படத்தைத் தயாரித்த நிறுவனத்தின் பின்னணி குறித்துத் தான் எதிர்ப்புத் தெரிவித்தபோது, கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் புதிய வாகனங்கள் வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தான் ஒரு நேர்மையான அரசியல்வாதி என்பதால்தான் அத்தகைய பெரிய தொகையையும் சலுகைகளையும் நிராகரித்ததாக வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பன்னாட்டு நிறுவனங்கள் தனது போராட்டங்களை முடக்கப் பலமுறை முயற்சித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். தற்போது நடிகர் விஜய் அரசியலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் சூழலில், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் இந்த ரகசியப் பேரம் தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…