ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு இன்னும் தணியவில்லை. பாகிஸ்தான் தூதுவர் வழியாக ஈரான் அனுப்பிய புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக நிராகரித்துள்ளார். ஈரானின் நிபந்தனைகள் தமக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றும், அணு ஆயுத விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதனால், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடையே நிலவுகிறது.
இந்த அரசியல் மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு அதன் விலை 50 சதவீதம் வரை எகிறியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளும், ஈரானின் பிடிவாதமான பதிலடிகளும் உலகப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து வருகின்றன. ஒருபுறம் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா தொடர்ந்து ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டு வருகிறது. இந்த இரு நாடுகளின் அதிகாரப் போட்டியால் சாமானிய மக்கள் எரிபொருள் விலை உயர்வால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…