மரண விளிம்பில் 192 மணி நேரம்…. 8 நாட்களுக்குப் பிறகு உயிருடன் வந்த அதிசயம்….. வெனிசுலாவையே கண்ணீரில் நனைய வைத்த மீட்புச் சம்பவம்….!

Spread the love

வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்துள்ள நிலையில், அங்கிருந்து கிடைத்துள்ள ஒரு நெகிழ்ச்சியான செய்தி பேரழிவைச் சந்தித்த மக்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் ஒளியையும் தந்துள்ளது. லா குவைரா கடலோரப் பகுதியில் உள்ள ‘கலெரியாஸ் பிளாயா கிராண்டே’ வணிக வளாகத்தில் இரவு நேரப் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்த 43 வயதான ஹெர்னான் ஆல்பெர்டோ கில் புளோரஸ் என்பவர், நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, சுமார் 8 நாட்களுக்குப் பிறகு அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்துள்ள அவரது இந்தச் உயிர்வாழ்க்கைப் போராட்டம் உலகையே நெகிழ வைத்துள்ளது.

கடந்த ஜூன் 24 அன்று நிலநடுக்கம் ஏற்பட்ட துயரமான தருணத்தில், ஹெர்னான் தனது சிறிய பாதுகாப்பு கேபினுக்குள் இருந்துள்ளார். சுற்றியிருந்த பிரம்மாண்டமான கான்கிரீட் கட்டிடம் இடிந்து தரைமட்டமான போதிலும், அவர் இருந்த அந்தச் சிறிய கேபின் மட்டும் உடையாமல் பலமாகத் தாக்குப் பிடித்துள்ளது. இதுவே அவர் மீது பெரும் இடிபாடுகள் நேரடியாக விழுந்துவிடாமல் தடுத்து, அவர் சுவாசிப்பதற்கான காற்றையும் வழங்கி, 8 நாட்களாக அவரது உயிரைக் காக்கும் அரணாகச் செயல்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடிபாடுகளுக்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டு, கோஸ்டாரிகா நாட்டின் செஞ்சிலுவைச் சங்க மீட்புக் குழுவினர் அவர் உயிருடன் இருப்பதை முதன்முதலில் கண்டறிந்தனர். அந்த இக்கட்டான சூழலிலும், “நான் ஒருவேளை இங்கிருந்து உயிருடன் மீட்கப்படாமல் இறந்துவிட்டால் என் மனைவி தாங்க மாட்டார், எனவே நான் உயிருடன் இருக்கும் விஷயத்தை இப்போதைக்கு அவரிடம் சொல்ல வேண்டாம்” என்று ஹெர்னான் உருக்கமாகக் கேட்டுக்கொண்டது மீட்புக் குழுவினரையே உருக வைத்துள்ளது.

சிலி நாட்டின் தீயணைப்பு வீரர்கள், அமெரிக்கா, போர்ச்சுகல், மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா ஆகிய நாடுகளின் சர்வதேச மீட்புக் குழுவினர் ஒருங்கிணைந்து இரவு பகலாகப் போராடி இந்த இமாலய மீட்புப் பணியைச் சாத்தியமாக்கியுள்ளனர். 8 நாட்களுக்குப் பிறகு ஹெர்னான் பத்திரமாக வெளியே கொண்டுவரப்பட்டதைக் கண்ட அவரது மனைவி கஸ்பிமார் கோன்சலஸ், “பல நாட்கள் நம்பிக்கையிழந்து தவித்தேன், அவர் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி இருண்ட என் வாழ்க்கையில் ஒரு ஒளிக் கீற்றாக வந்துள்ளது” என்று கண்ணீர்மல்கத் தெரிவித்துள்ளார். 8 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகளைக் கொண்ட இந்தத் தம்பதியின் வாழ்வில், சர்வதேச மீட்புக் குழுவினரின் அயராத உழைப்பும் ஹெர்னானின் அசாத்திய மனதிடமும் மீண்டும் ஒரு புதிய வசந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

Nanthini

Recent Posts

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

5 minutes ago

BREAKING:விஜய் அரசை வீழ்த்த கார்ப்பரேட் டீல்?… தவெக MLA-க்களை தூக்க பாய்ந்த ரூ .180 கோடி… நட்சத்திர விடுதியில் நடந்த நள்ளிரவு சதி…!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…

26 minutes ago

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

38 minutes ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

50 minutes ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

1 மணத்தியாலம் ago