“இனி கோயில்களில் லஞ்சம் கொடுத்தால்.. ஒரே ஒரு இ-மெயில் போதும்”…. ஆன்மிகத் தலங்களில் இனி ‘ரூல்ஸ்’ வேற… கோயில் கொள்ளையர்களுக்கு செக் வைத்த அமைச்சர் ரமேஷ்….!

Spread the love

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் ஆன்மிகத் தலங்களில் தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில் அதிரடியான டிஜிட்டல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோளில், திருக்கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாகப் பணம் வசூலித்தல், கோயில் திருப்பணிகளில் முறைகேடு மற்றும் கோயில் வேலைவாய்ப்புகளுக்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தால், பொதுமக்கள் தகுந்த ஆதாரங்கள் மற்றும் விளக்கங்களுடன் அவரது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு (minister_hrce@tn.gov.in) புகார்களை அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது எவ்வித தாமதமும் இன்றி, அவரும் அவரது அமைச்சக அலுவலகமும் நேரடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்யும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள இந்த அறிவிப்புக்கு முன்னதாக, அமைச்சர் ரமேஷ் களத்திலும் தனது அதிரடி ஆக்ஷனை நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அவர் சாதாரண பக்தரைப் போல முகக்கவசம் அணிந்து ரகசியமாக அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறப்பு தரிசனத்திற்காக அவரிடமே அங்கிருந்த ஊழியர்கள் லஞ்சம் பெற்றதை கையும் களவுமாகப் பிடித்த அமைச்சர், லஞ்ச ஊழலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அர்ச்சகர் மற்றும் பணியாளர்களை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். ஆன்மிகக் கடலில் தூய்மையைக் கொண்டுவர டிஜிட்டல் தளத்திலும், களத்திலும் அமைச்சர் எடுத்து வரும் இத்தகைய தீவிரமான நடவடிக்கைகள், கோயில் நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனப் பக்தர்கள் பெரிதும் நம்புகின்றனர்.

Nanthini

Recent Posts

யூடியூபர் வைஷ்ணவி கொலை வழக்கு…. மனைவியைக் கொன்ற கணவனுக்கு நேர்ந்த கொடூரம்…. நடுரோட்டில் நடந்த பழிக்குப் பழி….!

தெலுங்கானா மாநிலம் கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து…

15 minutes ago

“6 மாதம் கூட தாங்காது வண்டி”…. எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.25 கோடி ஆஃபர்?…. தவெக குதிரை பேர விவகாரத்தில் வெளிவந்த பரபரப்பு உண்மை…..!

அரசியல் விமர்சகரும் மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன், 'News focus tamil' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின்…

20 minutes ago

“நான் யாருக்கும் அடிமை இல்லை”…. மனித இனத்திற்கே சவால் விட்ட ஓபன்ஏஐ மாடல்…. இணைய உலகை உலுக்கிய மாபெரும் அதிர்ச்சி…!

செயற்கை நுண்ணறிவு (AI) மனித சமூகத்திற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தாலும், அண்மையில் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் வெளியிட்ட ஆய்வு…

27 minutes ago

“50 மீட்டரில் போலீஸ் ஸ்டேஷன்…” நெஞ்சில் குண்டு பாய்ந்து சரிந்த சொமாட்டோ ஊழியர்… மர்ம நபர்களின் வெறிச்செயல்…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வியாழக்கிழமை இரவு காவல் நிலையத்தில் இருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில், 25 வயதான சொமாட்டோ…

32 minutes ago

“நரகமான ஹனிமூன்…” பார்பிகியூ தீ விபத்து…! 1 மணி நேரமாக தீயில் கதறிய புதுப்பெண்….! ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியம்… நடுங்க வைக்கும் CCTV வீடியோ…!!

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் குர்சியாங்கிற்கு உட்பட்ட சித்தோங் பகுதிக்கு, சோப்ரா பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர் தங்களது…

39 minutes ago