“இனி கோயில்களில் லஞ்சம் கொடுத்தால்.. ஒரே ஒரு இ-மெயில் போதும்”…. ஆன்மிகத் தலங்களில் இனி ‘ரூல்ஸ்’ வேற… கோயில் கொள்ளையர்களுக்கு செக் வைத்த அமைச்சர் ரமேஷ்….!

Spread the love

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் ஆன்மிகத் தலங்களில் தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில் அதிரடியான டிஜிட்டல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோளில், திருக்கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாகப் பணம் வசூலித்தல், கோயில் திருப்பணிகளில் முறைகேடு மற்றும் கோயில் வேலைவாய்ப்புகளுக்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தால், பொதுமக்கள் தகுந்த ஆதாரங்கள் மற்றும் விளக்கங்களுடன் அவரது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு (minister_hrce@tn.gov.in) புகார்களை அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது எவ்வித தாமதமும் இன்றி, அவரும் அவரது அமைச்சக அலுவலகமும் நேரடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்யும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள இந்த அறிவிப்புக்கு முன்னதாக, அமைச்சர் ரமேஷ் களத்திலும் தனது அதிரடி ஆக்ஷனை நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அவர் சாதாரண பக்தரைப் போல முகக்கவசம் அணிந்து ரகசியமாக அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறப்பு தரிசனத்திற்காக அவரிடமே அங்கிருந்த ஊழியர்கள் லஞ்சம் பெற்றதை கையும் களவுமாகப் பிடித்த அமைச்சர், லஞ்ச ஊழலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அர்ச்சகர் மற்றும் பணியாளர்களை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். ஆன்மிகக் கடலில் தூய்மையைக் கொண்டுவர டிஜிட்டல் தளத்திலும், களத்திலும் அமைச்சர் எடுத்து வரும் இத்தகைய தீவிரமான நடவடிக்கைகள், கோயில் நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனப் பக்தர்கள் பெரிதும் நம்புகின்றனர்.

Nanthini

Recent Posts

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

8 minutes ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

21 minutes ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

46 minutes ago

BREAKING: “மரணத்தை விட கொடியது”…. அதிமுகவில் இருந்து வைகைச் செல்வன் விலகல்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

53 minutes ago

அதிர்ச்சி வீடியோ…. கரூரில் மேடையில் நடனமாடிக்கொண்டே உயிர் பிரிந்த கலைஞர்…. பதறவைக்கும் காட்சி….!

ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…

57 minutes ago

பருமன் உள்ள பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வேகமாகப் பரவுவது ஏன்…? மருத்துவ உலகையே உலுக்கிய புதிய கண்டுபிடிப்பு… ஆய்வின் வெளியான அதிர்ச்சி தகவல்…!

உடல் பருமன் என்பது வெறும் தோற்றம் சார்ந்த விஷயம் அல்ல; அது நீரிழிவு, இதய நோய் போன்றவற்றுடன் சில வகையான…

1 மணத்தியாலம் ago