கடந்த ஜூன் 20, 2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய் குறித்து கடுமையான சொற்களால் விமர்சித்தார். சினிமாவில் இருந்து விஜய் அரசியலுக்கு வந்ததை கிண்டல் செய்த அவர், சட்டமன்றத்தில் முதல்வர் அமர்ந்திருந்த விதம் மற்றும் முகபாவனைகளை ஒருமையில் விமர்சித்ததோடு, தவறான இரட்டை அர்த்தம் கொண்ட பழமொழிகளையும் பயன்படுத்திப் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த அவதூறு பேச்சைத் தொடர்ந்து, தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பொது அமைதியைக் குலைத்தல் மற்றும் மோதலைத் தூண்டுதல் (பி.என்.எஸ் பிரிவுகள் 352, 353(2)) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். காவல்துறையினர் தன்னை எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும் என்பதால், தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், அரசின் மீதான மக்களின் அதிருப்தியை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்ற முறையிலேயே தான் வெளிப்படுத்தியதாகவும், இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், இது அரசின் நிர்வாகக் குறைபாடு குறித்த பேச்சு மட்டுமே என்றும், தனிப்பட்ட விமரிசனம் இல்லை என்றும் வாதிடப்பட்டது. ஆனால், காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தவருக்கு பொதுவெளியில் பேசும் விபரம் தெரியவில்லை என்று கூறி முன்ஜாமீனுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் பொதுவெளியில் தகுதியோடு பேச வேண்டும்; எந்த முதலமைச்சரையும் அவதூறாகப் பேசக் கூடாது” எனக் கூறி அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தால் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. தூத்துக்குடி ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு ஆய்விற்காகச் சென்ற அனிதா ராதாகிருஷ்ணனை, அங்கு வந்த காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். முதல்வர் விஜய் குறித்த இந்த அவதூறு பேச்சும், அதனைத் தொடர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினரின் கைதும் தமிழக அரசியல் களத்தில் தற்போது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…
தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…
அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…
ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…
உடல் பருமன் என்பது வெறும் தோற்றம் சார்ந்த விஷயம் அல்ல; அது நீரிழிவு, இதய நோய் போன்றவற்றுடன் சில வகையான…