டீ கேட்டுக் கூப்பிட்ட 4 பிள்ளைகளின் தந்தை… நம்பி அனுப்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… 13 வயது சிறுமிக்கு நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

Spread the love

அகமதாபாத்தின் வத்வா பகுதியில், அண்டை வீட்டாரை நம்பித் தன் குழந்தையை அனுப்பிய தாய்க்குப் பேரிடியாக ஒரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வத்வா மாவட்டத்தின் சார் மாலியா பகுதியில் வசித்து வரும் இம்தியாஸ் ஷேக் (34) என்ற நபர், தனது வீட்டில் யாரும் இல்லை என்றும், தனக்குத் தேநீர் தயாரித்துத் தர வேண்டும் என்றும் கூறி பக்கத்து வீட்டுச் சிறுமியின் தாயை அணுகியுள்ளார். அந்தத் தாயும் எவ்வித சந்தேகமும் இன்றி, தனது 13 வயது மகளை அவனது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். திருமணமானவனும் நான்கு பிள்ளைகளின் தந்தையுமான அந்த நபர், தனக்குக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தைப் பாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

அங்கு சென்ற சிறுமியை முதலில் தேநீர் தயாரிக்கச் சொன்ன ஷேக், பின்னர் தின்பண்டங்கள் வாங்கி வருமாறு அருகிலுள்ள கடைக்கு அனுப்பியுள்ளார். சிறுமி கடைக்குச் சென்றுவிட்டுத் திரும்பியதும், யாரும் இல்லாத சமயம் பார்த்து அவளை வீட்டிற்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு நிறுத்தாமல், இந்தச் சம்பவத்தைப் பற்றி யாரிடமாவது கூறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்தச் சிறுமியைப் பயமுறுத்தி, மிரட்டலும் விடுத்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த தாய், நேரடியாக ஷேக்கின் வீட்டிற்குச் சென்று மகளை மீட்டு வந்துள்ளார். அச்சமயம் சிறுமியின் நடத்தையில் மாற்றம் தெரிந்தாலும், குற்றவாளி விடுத்த மிரட்டல் காரணமாகப் பயந்துபோய் தனக்கு நேர்ந்த கொடூரத்தை வெளியில் சொல்லாமல் மௌனமாக இருந்துள்ளார். ஆனால், மறுநாள் (ஜூலை 1) அந்தச் சிறுமி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தன் தாயிடம் தனக்கு நேர்ந்த அநீதியை அழுதுகொண்டே விவரித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக வத்வா காவல் நிலையத்தை அணுகி இம்தியாஸ் ஷேக்கிற்கு எதிராகப் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட ஷேக்கை அதிரடியாகக் கைது செய்தனர். அண்டை வீட்டாரைக் கூட நம்ப முடியாத அளவிற்குச் சமூகத்தில் பெருகி வரும் இத்தகைய குற்றங்கள், பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

SATHISH R

Recent Posts

BREAKING:விஜய் அரசை வீழ்த்த கார்ப்பரேட் டீல்?… தவெக MLA-க்களை தூக்க பாய்ந்த ரூ .180 கோடி… நட்சத்திர விடுதியில் நடந்த நள்ளிரவு சதி…!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…

9 seconds ago

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

12 minutes ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

25 minutes ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

50 minutes ago

BREAKING: “மரணத்தை விட கொடியது”…. அதிமுகவில் இருந்து வைகைச் செல்வன் விலகல்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

57 minutes ago

அதிர்ச்சி வீடியோ…. கரூரில் மேடையில் நடனமாடிக்கொண்டே உயிர் பிரிந்த கலைஞர்…. பதறவைக்கும் காட்சி….!

ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…

1 மணத்தியாலம் ago