பதவிக்காக தவெக-வை ஆதரித்தால் எம்.எல்.ஏ பதவி காலி..! அதிமுகவிற்கு டிடிவி தினகரன் அதிரடி எச்சரிக்கை…!!

Spread the love

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அமைத்துள்ள கூட்டணி ஆட்சிக்காலம் ஒரு தற்காலிகமானதும் ஊசலாடிக் கொண்டிருப்பதுமாகும் என்று விமர்சித்தார். கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் எத்தனை மாதங்களுக்கு இந்த ஆட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று தெரியவில்லை என்றும், ரீல்ஸ் ஆட்சி நடத்தாமல் ரியல் ஆக வந்தால் மட்டுமே உண்மையான ஆட்சி அமைக்க முடியும் என்றும் அவர் தவெக தலைமையைச் சாடினார்.

தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுக மற்றும் அமமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசிய தினகரன், பதவிக்காக தவெகவை ஆதரிக்கும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை சட்டப்படி இழக்க நேரிடும் என்று எச்சரித்தார். சட்டமன்ற கட்சித் தலைவர் மற்றும் கொறடாவை அரசியல் கட்சித் தலைமைதான் நியமிக்க முடியும் என்பதால், கொறடாவின் முடிவே இறுதியானது என்றும், சபாநாயகர் இந்த விவகாரத்தை அதிக நாட்கள் கடத்த முடியாது என்றும் குறிப்பிட்டார். மேலும், அமமுக சார்பில் மன்னார்குடியில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜை தவெக அமைச்சரவையில் சேர்த்தால், அங்கு குதிரை பேரம் நடந்துள்ளது என்பது உறுதியாகும் என்றும், அப்படி நடந்தால் சிபிஐ விசாரணை கோருவோம் என்றும் கூறினார்.

அதிமுகவை ஊழல் கட்சி என்றும் இளக்காரமாகவும் பேசிய தவெகவுடன், அக்கட்சியின் ஒரு பிரிவு எம்.எல்.ஏ-க்கள் கைகோர்ப்பது நியாயமற்றது என்று தினகரன் சுட்டிக்காட்டினார். தவெகவிற்கு ஆதரவு அளிப்பது என்பது கொல்லிக்கட்டையை எடுத்துத் தங்களது தலையிலேயே சொரிந்து கொள்வதற்குச் சமம் என்றும், பதவிக்காக ஆதரிப்பவர்களை வரலாறு மன்னிக்காது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அதிமுகவை அழிக்க தவெகவின் ஏஜெண்டாக செங்கோட்டையன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும், அதிமுகவில் நடக்கும் உட்கட்சிப் பூசல்களைப் பார்த்து பாஜக தலைவர்கள் வருத்தப்படுவதாகவும் அவர் தனது பேட்டியில் குற்றம்சாட்டினார்.

Swetha

Recent Posts

ச்சீ.. 2,000 ரூபாய் வாடகைக்காக.. பெற்ற மகளையே சீரழிக்க.. ஓனர்-க்கு பிளான் போட்டு கொடுத்த தந்தை.. போக்சோவில் சிக்கிய கொடூரர்கள்…!!

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி தன் குடும்பத்துடன்…

12 minutes ago

“கானா பாடகர்கள் கொடூரமாக வெட்டி கொலை!.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்.. பின்னணியில் இருக்கும் ‘அந்த’ பகை?… தீவிர விசாரணையில் போலீஸ்”…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பரத் (25) மற்றும் சீனு (24). இசைக் கச்சேரிகளில்…

16 minutes ago

“நேரில் வா பேசிக்கலாம்”.. நம்பி வந்த காதலிக்கு நேர்ந்த விபரீதம்… காதலன் கொடூர செயல்… நடுங்க வைக்கும் பின்னணி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவரும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் கடந்த சில காலமாகத்…

26 minutes ago

சென்னையில் பயங்கரம்.. 18 வயது சிறுவனுடன் கள்ளக்காதல்.. குடும்ப மானம் போகுதுனு.. 5 வயது குழந்தையின் கண்முன்னே.. அக்காவையே வெட்டி சாய்த்த தம்பி…!!

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே, தன் 5 வயதுக் குழந்தையின் கண்முன்னே தாய் ஒருவர் சொந்தத் தம்பியாலேயே படுகொலை செய்யப்பட்ட…

27 minutes ago

பிரியாணி வாங்கிய சண்டை… மஞ்சள் பூசி மறைக்கப்பட்ட கொலை கொடூரம்.. இறுதிச்சடங்கில் அம்பலமான கணவனின் நாடகம்.. அரியலூரை உலுக்கிய சம்பவம்…!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பிரியாணி வாங்கியதில் ஏற்பட்ட தகராறில், மனைவியை கணவன் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம்…

28 minutes ago

கோவில்பட்டியில் பயங்கரம்!… 3 வயது சிறுமியை ஓட ஓட விரட்டிய தெருநாய்கள்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமியைத் தெருநாய்கள் ஓட ஓட விரட்டித் தாக்கிய அதிர்ச்சியூட்டும்…

36 minutes ago