தஞ்சாவூரில் பயங்கரம்… KFC உணவகத்தில் திடீரென வெடித்த சிலிண்டர்… துடிதுடித்துப் போன ஊழியர்…!

Spread the love

தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டடத்தின் தரைத்தளத்தில் இயங்கி வரும் பிரபல கே.எஃப்.சி (KFC) உணவகத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏசி கேஸ் நிரப்பும் போது சிலிண்டர் வெடித்து ஒரு கோர விபத்து நேரிட்டது. இந்த விபத்தின் போது சமையல் கூடத்தில் இருந்த ஏசி பழுதடைந்ததால், நாஞ்சிக்கோட்டை சாலையைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் கணேசன் (43) என்பவர் அதனைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக, அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்த பயங்கர வெடி விபத்தின் அதிர்வில் உணவகத்தின் ஜன்னல் மற்றும் கதவு கண்ணாடிகள் சுக்குநூறாக நொறுங்கியதோடு, ஏசியின் பாகங்களும் நாலாபுறமும் சிதறி விழுந்தன. இதில் ஏசி மெக்கானிக் கணேசன், கே.எஃப்.சி ஊழியர்கள் மற்றும் ஆன்லைன் உணவு விநியோக ஊழியர்கள் (Delivery Boys) என மொத்தம் 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினரும், தெற்கு காவல் நிலைய போலீஸாரும் காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம்:

  • கணேசன் (43) – ஏசி மெக்கானிக்
  • ரவிராஜ் (34) – கே.எஃப்.சி எலெக்ட்ரிக் ஊழியர் (தற்போது உயிரிழந்துள்ளார்)
  • அருண்குமார் (26) – கே.எஃப்.சி ஊழியர்
  • கதிரேசன் (24), பிரேம் (26), அஜித்குமார் (22) – ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள்

விபத்து நடந்த போது ஏசி சீரமைப்புப் பணியைக் கண்காணித்துக் கொண்டிருந்த கே.எஃப்.சி-யின் எலெக்ட்ரிக் ஊழியரான ரவிராஜுக்கு (34) தலையில் மிகக் கடுமையான காயம் ஏற்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இதே கடையில் பணியாற்றி வந்த இவருக்கு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. எனினும், அவரது நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்ததால், கடந்த சில நாட்களாகப் போராடி வந்த ரவிராஜ் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து நேரிட்ட இடத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மற்றும் தஞ்சாவூர் எம்.எல்.ஏ விஜய் சரவணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்த எம்.எல்.ஏ விஜய் சரவணன், இந்தத் துயரமான விபத்து குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிரிழந்த ரவிராஜின் குடும்பத்திற்கும் அரசுத் தரப்பில் இருந்து உரிய நிவாரண உதவி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்துப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“சேகர்பாபுவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்” ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியின் துணைத் தலைவரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவீந்திரன், அக்கட்சியின் தலைமைக்கு சமூக…

3 minutes ago

BIG BREAKING: அடுத்த 6 மாதங்களில் விஜய் ஆட்சி கவிழும்… தனபால் MP பரபரப்பு பேட்டி..!!

அடுத்த 6 மாதங்களில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி கவிழும் என்று அதிமுக-வைச் சேர்ந்த தனபால் MP அதிரடியாகவும் பரபரப்பாகவும்…

24 minutes ago

நள்ளிரவில் வீடுபுகுந்து… செய்தியாளரை சரமாரியாக வெட்டிய கஞ்சா கும்பல்.. தமிழகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஞ்சா விற்பனைக்கு எதிராகத் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா மொகைதீன்,…

27 minutes ago

EPS எங்களை கூப்பிடுறாரு.. ஆனா இன்னொரு பக்கம் என்ன நடக்குது தெரியுமா..? போட்டுடைத்த சிவி சண்முகம்…!!

அதிமுகவின் தொடர் படுதோல்விகளுக்கு அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) தான் முழு முதற்காரணம் என்று கட்சியின்…

39 minutes ago

“லிஃப்ட் தர்றோம்னு கூப்பிட்டு..” வாய் பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… புதுக்கோட்டையை உலுக்கிய 2 காமப்பேசுகள் கைது..!!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்…

41 minutes ago