சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருவதால் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்கள் அதிக அளவிலான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. முன்பெல்லாம் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த சீரியல்களுக்கு தற்போது டிமாண்ட் அதிகரித்துள்ள காரணத்தால் 7 நாட்களும் ஒளிபரப்பி வருகிறார்கள். ஒரு சீரியல் எந்த அளவு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுகிறது என்பதை டிஆர்பி மூலம் தான் கண்டறிய முடியும். அதன்படி இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
அதன்படி சன் டிவியில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து கொண்டு வருவது சிங்க பெண்ணே சீரியல். இதில் அன்பு மற்றும் ஆனந்தியின் கெமிஸ்ட்ரிக்கு ஏராளமான வரவேற்பு கிடைத்துள்ளது. அதனாலயே இந்த சீரியல் மக்கள் மனதில் இடம் பிடித்து 9.92 புள்ளிகளுடன் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்துள்ளது.
அடுத்ததாக மூன்று முடிச்சு சீரியலில் எப்போதும் கையில் மதுவை வைத்துக்கொண்டு குடிப்பழக்கத்திற்கு ஆளாகி நிதானம் இல்லாமல் தள்ளாடும் சூர்யாவை திருத்தும் முயற்சியில் நந்தினி பிளான் பண்ணி ஒவ்வொரு காரியத்தையும் சாதித்து வருகிறார். மக்கள் மனம் கவர்ந்த இந்த சீரியல் 9.73 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
அடுத்ததாக கயல் சீரியலில் தேவி ஆசைப்பட்ட மாதிரி வளைகாப்பு நல்லபடியாக நடத்த வேண்டும். வளைகாப்புக்கு அவருடைய கணவரையும் சமரசம் செய்து கூட்டி வர வேண்டும் என்று கயல் வாக்குறுதி கொடுத்துள்ள நிலையில் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் 9.28 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
அடுத்ததாக பிரபுவின் கஞ்சத்தனத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு வர வேண்டும் என்று ஆதிரை போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மருமகள் சீரியல் மக்கள் மனதை கவர்ந்து 8.46 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒட்டுமொத்த சீரியல்களையும் பின்னுக்குத் தள்ளி ரசிகர்களை மனம் கவர்ந்த சிறகடிக்க ஆசை சீரியல் புதுப்புது திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் 8.14 புள்ளிகளுடன் இந்த வாரம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அன்னம் சீரியல் 7.53 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தையும், எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் ஏழாவது இடத்தையும், ராமாயணம் எட்டாவது இடத்தையும், பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளன.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…