சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருவதால் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்கள் அதிக அளவிலான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. முன்பெல்லாம் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த சீரியல்களுக்கு தற்போது டிமாண்ட் அதிகரித்துள்ள காரணத்தால் 7 நாட்களும் ஒளிபரப்பி வருகிறார்கள். ஒரு சீரியல் எந்த அளவு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுகிறது என்பதை டிஆர்பி மூலம் தான் கண்டறிய முடியும். அதன்படி இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
அதன்படி சன் டிவியில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து கொண்டு வருவது சிங்க பெண்ணே சீரியல். இதில் அன்பு மற்றும் ஆனந்தியின் கெமிஸ்ட்ரிக்கு ஏராளமான வரவேற்பு கிடைத்துள்ளது. அதனாலயே இந்த சீரியல் மக்கள் மனதில் இடம் பிடித்து 9.92 புள்ளிகளுடன் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்துள்ளது.
அடுத்ததாக மூன்று முடிச்சு சீரியலில் எப்போதும் கையில் மதுவை வைத்துக்கொண்டு குடிப்பழக்கத்திற்கு ஆளாகி நிதானம் இல்லாமல் தள்ளாடும் சூர்யாவை திருத்தும் முயற்சியில் நந்தினி பிளான் பண்ணி ஒவ்வொரு காரியத்தையும் சாதித்து வருகிறார். மக்கள் மனம் கவர்ந்த இந்த சீரியல் 9.73 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
அடுத்ததாக கயல் சீரியலில் தேவி ஆசைப்பட்ட மாதிரி வளைகாப்பு நல்லபடியாக நடத்த வேண்டும். வளைகாப்புக்கு அவருடைய கணவரையும் சமரசம் செய்து கூட்டி வர வேண்டும் என்று கயல் வாக்குறுதி கொடுத்துள்ள நிலையில் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் 9.28 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
அடுத்ததாக பிரபுவின் கஞ்சத்தனத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு வர வேண்டும் என்று ஆதிரை போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மருமகள் சீரியல் மக்கள் மனதை கவர்ந்து 8.46 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒட்டுமொத்த சீரியல்களையும் பின்னுக்குத் தள்ளி ரசிகர்களை மனம் கவர்ந்த சிறகடிக்க ஆசை சீரியல் புதுப்புது திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் 8.14 புள்ளிகளுடன் இந்த வாரம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அன்னம் சீரியல் 7.53 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தையும், எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் ஏழாவது இடத்தையும், ராமாயணம் எட்டாவது இடத்தையும், பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளன.
தன் காதலனுடன் ரெஸ்டாரண்ட், ஹோட்டல் மற்றும் மால் போன்ற இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்க்கக் கையில் பணமில்லாமல் தவித்த இளம்பெண் ஒருவர்,…
இளம் ஜோடியினர் ஒடிசாவிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெத்தபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த…
நேபாள நாட்டில் வரலாறு காணாத பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஒட்டுமொத்த தேசமே பெரும் துயரத்திலும் பேரழிவிலும் மூழ்கியுள்ளது. ஆயிரக்கணக்கான…
திமுகவில் கட்சி அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் தீவிர மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும்…
டெல்லி நரேலா பகுதியில் உள்ள ஜிம் வெளியே ஹரியானாவைச் சேர்ந்த பிரமோத் தஹியா என்ற சொத்து வியாபாரி மர்ம நபர்களால்…
திருமணமான வெறும் 13 நாட்களிலேயே புதுப்பெண் ஒருவரின் அதிர்ச்சி தரும் கள்ளத்தொடர்பு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புதுமனைவி தனது கணவனின்…