தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பக்கம் சாய்ந்துள்ளதால், தவெக தலைமையிலான புதிய கூட்டணி வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில், இக்கூட்டணியின் பெயர் மற்றும் ‘ஒருங்கிணைப்பாளர்’ பதவி யாருக்கு என்பது குறித்த ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் இடையே கடும் போட்டி நிலவிய சூழலில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், கூட்டணிக்குள்ளேயே மூத்த தலைவர்கள் பொதுவெளியில் விமர்சித்துக் கொள்வது தவெக தலைவர் விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், தேர்தல் நேரத்தில் திமுகவை ஆதரித்த சிதம்பரத்தின் மீது ராகுல் காந்தியும் அதிருப்தியில் இருப்பதால் அவரை நியமிக்க விஜய்யும் தயக்கம் காட்டி வருகிறார்.
இதனால், கூட்டணிக்குள் எவ்வித புகைச்சலும் இன்றி, அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் மாற்றுத் திட்டம் ஒன்றை விஜய் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த மூன்று முக்கியத் தலைவர்களையும் தவிர்த்துவிட்டு, கூட்டணியில் உள்ள மற்றொரு மூத்த தலைவரான இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் காதர் மொய்தீனை ஒருங்கிணைப்பாளராக நியமிக்க தவெக தரப்பு ஆலோசித்து வருகிறது. தமிழக அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட காதர் மொய்தீனை இந்தத் தலைமைப் பதவிக்குக் கொண்டு வருவதன் மூலம், கூட்டணிக்குள் நிலவும் ஈகோ பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, சிறுபான்மையினர் மத்தியிலும் தவெகவின் செல்வாக்கை மேலும் பலப்படுத்த முடியும் என விஜய் திட்டமிடுகிறார். விரைவில் இந்தக் கூட்டணியின் பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…