“இறந்த குழந்தை மீண்டும் பிழைக்கும்” சடலத்தின் மீது உப்பை போட்டு… பிரேத பரிசோதனை அறைக்கு வெளியே நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

Spread the love

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில், தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த தங்களது சிறுமியின் சடலத்தை உப்பில் புதைத்து, காதில் குர்ஆன் துதியை ஒலிக்கவிட்டு உயிர் வரும் என பெற்றோர்கள் 2 மணி நேரம் காத்திருந்த விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. அமினா என்ற அந்தச் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த நவநகர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், குழந்தையின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பெற்றோர் மற்றும் உறவினர்கள், நீரில் மூழ்கி இறந்தவரை உப்பில் புதைத்தால் மீண்டும் உயிர் பெற்றுவிடுவார் என்ற மூடநம்பிக்கையை நம்பியுள்ளனர். இதனால், மருத்துவமனைக்கு வெளியிலேயே குழந்தையின் முகம் மட்டும் தெரியும்படி உடலை உப்பில் புதைத்து வைத்தனர். அதோடு நில்லாமல், தங்களது மொபைல் போனில் குர்ஆன் துதியை ஒலிக்கச் செய்து, அதைச் சிறுமியின் காதருகே வைத்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், எந்தவித அசைவோ அல்லது அற்புதமோ நிகழாததால் பெற்றோர் ஏமாற்றமடைந்தனர். அதன் பின்னர், அங்கு வந்த போலீசார் மற்றும் மருத்துவர்கள் அவர்களுக்குப் புரியவைத்து, சடலத்தை மீட்டெடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆபத்தான சூழலில் இருப்பவர்களை இது போன்ற மூடநம்பிக்கைகளை நம்பி தாமதிக்காமல், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் எனப் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Soundarya

Recent Posts

உஷார்! உங்க போனுக்கும் இந்த மெசேஜ் வரலாம்… வடமாநில கும்பலின் மார்பிங் மிரட்டலுக்கு பலியான 20 வயது இளைஞர்… வெறும் 3000 ரூபாய் கடனுக்கு இப்படியா…!

ஆன்லைன் கடன் செயலிகளின் பேராசைக்கும், டிஜிட்டல் மிரட்டல்களுக்கும் மற்றுமொரு இளம் உயிர் பலியாகியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…

3 minutes ago

அமெரிக்கா போட்ட ஒரே ஒரு போடு… ராக்கெட் வேகத்தில் எகிறிய ‘தங்கம்’… இனி சாமான்யர்கள் வாங்கவே முடியாதா…!

அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளின் அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குதிரை வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான…

20 minutes ago

ஐரோப்பாவை நடுங்க வைக்கும் ‘ஒமேகா பிளாக்’… இந்திய பருவமழையை காலி செய்யப் போகிறதா… அதிர்ச்சித் தகவல்…!

தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…

44 minutes ago

இவன் மனிதனே இல்லை…! இரண்டு லாரிகளுக்கு நடுவே புகுந்த ‘மரண ஓவர்டேக்’… சோசியல் மீடியாவை உலுக்கும் ஷாக்கிங் வீடியோ…!!

சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…

49 minutes ago

முடியலடா சாமி..! கொளுத்தும் வெயிலுக்குப் பயந்து… கடையிலேயே பாயை விரித்த மக்கள்… பிரம்மாண்ட பர்னிச்சர் கடையை ஆக்கிரமித்த பொதுமக்கள்… நெட்டிசன்கள் வியப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…

52 minutes ago