Categories: சினிமா

நான் என் சொத்தை விற்றபோது என் மனைவி அழுதார்… அப்போது அந்த முடிவை எடுத்தேன் – இயக்குனர் சுந்தர் சி பகிர்ந்த எமோஷனல் தருணம்!

Spread the love

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்‌ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.

சுந்தர் சி படத்துக்கு சென்றால் வாய்விட்டு சிரித்து ரசித்துவிட்டு வரலாம் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்கேற்றார் போல சுந்தர் சி படங்கள் சுமாராக் இருந்தாலும் காமெடி கட்டாயம் ஹிட்டாகிவிடும். அதே போல சொன்ன பட்ஜெட்டில் சொன்ன தேதிக்குள் படத்தை எடுத்துக் கொடுத்துவிடுவார் என்ற நல்ல பெயரும் சுந்தர் சி க்கு உண்டு. அதே போல ஷூட்டிங்கில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை மாற்று யோசனை செய்து சமாளித்துவிடுவார் என்றும் அவரைப் பற்றி சொல்லப்படுவதுண்டு.

அவரது படங்கள் எப்போதுமே மினிமம் கியாரண்டி என்பதற்கு சமீபத்தில் ரிலீஸாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ‘மத கஜ ராஜா’ திரைப்படமே உதாரணம். இந்த படம் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகி யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றிப் படமாகியுள்ளது. பொங்கலுக்கு ரிலீஸான பல படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக உள்ளது.

சுந்தர் சி தன்னுடைய மசாலாப் படங்கள் ஸ்டைலை விட்டு இயக்கிய வித்தியாசமான படங்களில் ஒன்று ‘அன்பே சிவம்’. கமல்ஹாசன் கேட்டுக் கொண்டதற்காக அந்த படத்தை அவர் இயக்கினார். ஆனால் அந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது. அதனால் அடுத்த சில மாதங்கள் சுந்தர் சி க்கு அடுத்தப் பட இயக்க வாய்ப்புகள் வரவில்லை.

இதுபற்றி பேசியுள்ள அவர் “அந்த காலகட்டத்தில் எனக்கு வரவேண்டிய பணம் வரவில்லை. அதனால் சில வரிப் பிரச்சனைகளால் நான் சம்பாதித்து முதல் முதலாக வாங்கிய ஒரு வீட்டை விற்றேன். நான் செண்ட்டிமெண்டலான ஆள் இல்லை. ஆனால் அதை நான் விற்றபோது என் மனைவி அழுதார். அப்போது நான் முடிவு பண்ணினேன். இனிமேல் என் மனைவி கண்ணில் நான் கண்ணீரைப் பார்க்கக் கூடாது என்று. அதை இப்போதுவரை நான் காப்பாற்றி வருகிறேன் என்பதுதான் என் சாதனையாகப் பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

ஐயோ… இஸ்ரேல் தாக்கிய கட்டிடம்… திடீரென இடிந்து 5 குழந்தைகள் உட்பட… 20 பேர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கிய பகீர் சோகம்…!!

காசா நகரத்தின் தல் அல்-ஹவா பகுதியில், இஸ்ரேலின் முந்தைய வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகச் சேதமடைந்திருந்த ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம்…

21 seconds ago

“‘என் மகனை உண்மையா காதலிச்சா செத்து போடி…” 17 வயது பள்ளி மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய கொடூர தாய்… வீட்டில் சிக்கிய CCTV ஆதாரம்…. பகீர் பின்னணி…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்க்கேஜ் பகுதியில், 17 வயது பிளஸ் 2 பள்ளி மாணவி ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக…

7 minutes ago

ஐயோ கொடுமையே… பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து… முன்னாள் ராணுவ வீரர், மகள் வெட்டிக்கொலை… சொத்துத் தகராறில் உறவினர்கள் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் சம்பவம்…!

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்த உறவினர்கள் சிலர், 67 வயதான முன்னாள் ராணுவ…

13 minutes ago

விநாயகர் சதுர்த்தி விழாவில் சோகம்…! சிலையை கரைக்க சென்ற 6 மாணவர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பலி…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பட்டாஞ்செரு பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலையை நீரில் கரைக்க செய்யச்…

13 minutes ago

திக் திக்… குழந்தையைத் தோளில் சுமந்த… நபர் மீது விழுந்த ராட்சத பாம்பு… அருவியில் உரைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ… மகாராஷ்டிராவில் அரங்கேறிய சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அம்போலி அருவியில் சுற்றுலா சென்ற குடும்பத்தினருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. தனது…

17 minutes ago

“எனக்கு அத்தை தான் வேணும்…” 5 பிள்ளைகளின் தாயுடன் காதல்… மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி சிட்டி கொத்வாலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 5 குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர் தனது…

23 minutes ago