காசா நகரத்தின் தல் அல்-ஹவா பகுதியில், இஸ்ரேலின் முந்தைய வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகச் சேதமடைந்திருந்த ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என காசாவின் சிவில் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களால் இக்கட்டிடத்தின் பலம் முற்றிலும் குலைந்திருந்தது. எனினும், காசாவில் நிலவும் கடுமையான தங்குமிடம் மற்றும் கூடாரப் பற்றாக்குறை காரணமாக, வேறு வழியின்றி ஆபத்தான நிலையிலும் மக்கள் அதில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அடிப்படை மீட்புக் கருவிகள் மட்டுமே உள்ள சூழலில், எகிப்திய கொடிகள் ஏந்திய எக்ஸ்கவேட்டர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றி உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் காசாவின் பெரும்பான்மையான கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், அங்குள்ள சுமார் 2,000 கட்டிடங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனரக மீட்பு இயந்திரங்களை காசாவிற்குள் அனுமதிக்காததே மீட்புப் பணிகள் தாமதமாவதற்குக் காரணம் என உள்ளூர் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதேவேளையில், பாதுகாப்பற்ற இடிபாடுகளில் மக்கள் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த தர்ஷன் சோனாவனே என்ற வாலிபர், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக மறைந்த முன்னாள் துணை முதல்வர்…
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திரபுரிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'இந்திரபுரி கே ராஜா' விநாயகர் பந்தல், 'காந்தாரா' திரைப்படத்தின்…
வழக்கமாக விநாயகப் பெருமானுக்கு லட்டு மற்றும் மோதகம் படைக்கப்படும் நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பக்தர்கள் "போபா டீ"…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மல்லுபுரா காவல் எல்லைக்குட்பட்ட தனௌலி மயானம் அருகே உள்ள சாக்கடையில், வாலிபர் ஒருவரின் சடலம்…
பீகாரில் வீதியோரம் காரப்பொறி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரி ஒருவரை, நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும்…
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில்…