சுதா கொங்கரா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றம் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைப்பட ஆசிரியர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய திரையுலகில் நன்கு அறியப்பட்டவர். ஆந்திர பிரதேசம் விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த சுதா கொங்கராவிற்கு சிறுவயதில் இருந்தே இயக்கத்தில் ஆர்வம் வந்தது. 2019 ஆம் ஆண்டு தமிழில் துரோகி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு இறுதி சுற்று திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு சூரரை போற்று திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். அந்த படத்தை எடுத்த விதம் மற்றும் கதை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனை வைத்து SK25 திரைப்படத்தை இயக்கி வருகிறார் சுதா கொங்கரா.
இந்நிலையில் சுதா கொங்கராவின் நீண்ட நாள் தோழி மற்றும் அவரது முதல் படத்தின் தயாரிப்பாளர் ஆன மனோ அக்கினேனி என்பவர் உயிர் இழந்திருக்கிறார். அவருக்காக சுதா கொங்கரா உருக்கமாக ஒரு செய்தியை எழுதி பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது என்னவென்றால் என்னுடைய நெருங்கிய தோழி மற்றும் முதல் தயாரிப்பாளர் என்னுடைய எல்லா தவறுகளையும் இயக்கத்தையும் கூடவே இருந்து பார்த்தவர். என்னுடைய படைப்புகளை முதல் பார்வையாளராக இருந்து கவனித்து பாராட்டியவர். நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் என்னுடைய படங்களை எல்லாம் உனக்கு டெடிகேட் செய்கிறேன் என்று உருக்கத்துடன் பதிவிட்டு இருக்கிறார் சுதா கொங்கரா.
தமிழக அரசியல் களத்தில் தவெகவைச் சுற்றி உருவாகியுள்ள புதிய நகர்வுகள் பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கின்றன. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெகவில் இணையத்…
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான இளையராஜா, கடந்த ஆகஸ்ட் 12-ஆம்…
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் பாஜக இணைந்து தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். கட்சியில் இணைந்தது…
டெல்லியின் துவாரகா பகுதியில் வசித்து வந்த 30 வயதான நாசியா கானம் என்ற மத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி,…
சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கை நிறுத்திவிட்டுச் சென்ற உரிமையாளர் ஒருவர், 6 மாதங்கள் கழித்து…
குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் பல ஆண்டுகள் வெளிநாட்டில் தங்கி உழைத்த நபர் ஒருவர், நீண்ட இடைவெளிக்குப்…