தமிழக அரசியல் களத்தில் தவெகவைச் சுற்றி உருவாகியுள்ள புதிய நகர்வுகள் பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கின்றன. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெகவில் இணையத் தயார் எனச் செங்கோட்டையன் பேசிய பேச்சு, தவெக தலைமையின் நேரடி ஆசிர்வாதத்துடனேயே அரங்கேறியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆட்சிக்கு ஆதரவளித்தது நாங்களா அல்லது அதிகாரிகளா என சிபிஎம் மூத்த தலைவர் சண்முகம் கேள்வி எழுப்பியதும், பிரதமர் வேட்பாளர் தொடர்பான சர்ச்சை விவகாரத்தில் காங்கிரஸும் தவெகவை உக்கிரமாக விமர்சித்து வருவதும் கூட்டணியில் உள்ள விரிசல்களை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன.
இந்தச் சூழலில், கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிகளுக்குப் பணிந்துபோக தவெக அரசுத் தலைமை தயாராக இல்லை என்பதையும், தங்களுக்கு மாற்று வழிகள் திறந்தே இருக்கின்றன என்பதையும் சூசகமாக உணர்த்தும் உத்தியாகவே, செங்கோட்டையனைத் தவெக தலைமை இப்படிப் பேச அனுமதித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வரும் துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு…
பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழக அரசியல் மற்றும் பொருளாதாரக் தளங்களில்…
கடந்த ஆட்சிக்காலத்தில் தனியார் மற்றும் சிறுபான்மையினப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காகக் கட்டாயப்படுத்திப் பணம் வசூலிக்கப்பட்டதாக நிதியமைச்சர் மரியவில்சன் சட்டப்பேரவையில் புயலைக்…
ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம் என்ற முதன்மை முழக்கத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, ஆட்சிப் பொறுப்பேற்ற…
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாகவும் அவை முன்னவராகவும் செயல்பட்டு வரும் கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில்…
தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், தமிழக வெற்றி கழகத்திற்கு தனித்து…