ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு (25) என்ற இளைஞர், சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்தார். மாதம் ரூ. 25,000 சம்பளம் வாங்கி வந்த இவர், ஆன்லைன் முதலீட்டில் பெருமளவில் பணத்தை இழந்து பெரும் கடனில் சிக்கியுள்ளார்.
கடும் கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஸ்ரீராம், கடனை அடைப்பதற்காகக் குறுக்கு வழியில் இறங்கி நகை அடகுக் கடையில் திருடத் திட்டம் தீட்டியுள்ளார். இதன்படி, கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி நள்ளிரவு சென்னை இந்திரா நகர் 17-வது குறுக்குத் தெருவில் உள்ள மங்கள்சந்த் என்பவருக்குச் சொந்தமான நகை அடகுக் கடையின் பூட்டை உடைக்க முயன்றுள்ளார்.
அப்போது பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து, தப்பியோட முயன்ற ஸ்ரீராமை மடக்கிப் பிடித்துத் திருவான்மியூர் போலிஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், ஆன்லைன் நஷ்டத்தால் வந்த கடனை அடைக்கவே முதன்முறையாகத் திருட முயன்றதாகவும், அனுபவம் இல்லாததால் மாட்டிக்கொண்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரைக் கைது செய்த போலிஸார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
ஹரியானா மாநிலம் குர்கிராமின் முக்கியச் சாலையான கோல்ஃப் கோர்ஸ் ரோட்டில், 'சியா' என்ற பெண் பைக் ரைடர் தனது நண்பர்களுடன்…
ரெடிட் தளத்தில் 30 வயது நிரம்பிய நபர் ஒருவர் தனது நிதி நிலைமை குறித்துப் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பெரும்…
அசாம் மாநிலம் போங்கைகாவோன் பகுதியைச் சேர்ந்த சமேஷ் மொண்டல் என்பவர் நள்ளிரவில் மிகுந்த பசியோடு 'சொமாட்டோ' செயலி மூலம் 'கொல்கத்தா…
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணலால் (41) என்பவரின் மனைவி யாமினி. இவர்களது குடியிருப்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான…
மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டம், புனேஷ்வர் கோவில் அருகே 'தன்ஹா போலா' திருவிழாவையொட்டி பொழுதுபோக்கு பொருட்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. புல்சவாங்கி பகுதியைச்…
பெங்களூரு யெல்லப்பா கார்டன் பகுதியைச் சேர்ந்த 40 வயதான முபாரக் பாஷா என்பவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பக்கவாதம் ஏற்பட்டு…