மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டம், புனேஷ்வர் கோவில் அருகே ‘தன்ஹா போலா’ திருவிழாவையொட்டி பொழுதுபோக்கு பொருட்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. புல்சவாங்கி பகுதியைச் சேர்ந்த பாலி மரோட்டி (25) என்ற இளம்பெண் அங்கிருந்த கைகளால் இயக்கப்படும் ‘ஜெயண்ட் வீல்’ ராட்டினத்தில் ஏறியுள்ளார்.
ராட்டினம் சுற்றத் தொடங்கிய சில வினாடிகளிலேயே அப்பெண்ணின் நீண்ட தலைமுடி ராட்டினத்தின் சுழலும் பேரிங்கில் சிக்கிக் கொண்டது. இதனால் அவர் வலியால் கத்தி கூச்சலிட்ட போதிலும், ராட்டினம் வேகமாகச் சுழலத் தொடங்கியதால் உடனடியாக அதை நிறுத்த முடியவில்லை. ராட்டினத்தின் வேகத்தில் தலைமுடி பலமாக இழுக்கப்பட்டதில், அவரது உச்சந்தலையின் தோல் முழுவதுமாகப் பிய்ந்து தனியாக வந்தது.
அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக ராட்டினத்தை நிறுத்தி அப்பெண்ணை மீட்டனர். தலையில் மிகக் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட பாலி மரோட்டி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ பரவியதைத் தொடர்ந்து, இதுபோன்ற பொருட்காட்சிகளில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், ராட்டினங்களில் ஏறும்போது தளர்வான ஆடைகள் மற்றும் தலைமுடியை கவனமாகக் கட்டி வைக்க வேண்டும் என்றும் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…
வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச்…
லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…
திமுக கூட்டணியில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் இதுவரை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக்…
தமிழக அரசியல் களம் இடைத்தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மதிமுக மாவட்டச் செயலாளர் ஆற்றிய உரை பெரும் விவாதத்தைக்…
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி, நிகழ்ச்சியின் போட்டியாளர் ஷாதிகாவிடம் 'தலைமைப் பண்பு' குறித்துப் பேசிய கருத்துகள்…