பெங்களூரு யெல்லப்பா கார்டன் பகுதியைச் சேர்ந்த 40 வயதான முபாரக் பாஷா என்பவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பக்கவாதம் ஏற்பட்டு வீட்டிலேயே படுக்கையாக இருந்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி ஷஹீனா பானுவுக்கும் (39) அவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, குடும்ப நண்பரான நஹீம் உத்தின் குரேஷி என்பவனுடன் பானுவுக்குத் திருமணத்தை மீறிய கள்ளத்தொடர்பு உருவானது.
இதையடுத்து, பக்கவாதக் கணவனைக் கொன்றுவிட்டு ஒன்றாக வாழ முடிவு செய்த பானு, இந்தச் சதித்திட்டத்திற்குத் தனது தாய் ஹசீனா ஜானுவின் உதவியையும் பெற்றுள்ளார். செப்டம்பர் 9-ஆம் தேதி இரவு முபாரக் பாஷா தூங்கிக்கொண்டிருந்தபோது, மூவரும் சேர்ந்து அவரது கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றனர். சுதாரித்துக்கொண்ட முபாரக் பாஷா அவர்களை எதிர்த்துப் போராடியபோதிலும், அவரது முகம் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் கொடூரமாகத் தாக்கி மூச்சுத்திணற வைத்துப் படுகொலை செய்தனர்.
கொலை செய்த பிறகு, முபாரக் பாஷா மாரடைப்பால் இறந்துவிட்டார் என உறவினர்களை நம்ப வைக்க நாடகமாடினர். ஆனால், அவரது சடலத்தில் இருந்த காயங்களைப் பார்த்துச் சந்தேகமடைந்த உறவினர்கள் போலிஸுக்குத் தகவல் கொடுத்தனர். பிரேதப் பரிசோதனையில் அவர் மூச்சுத்திணறலால் அடித்துக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஷஹீனா பானு, கள்ளக்காதலன் குரேஷி மற்றும் தாய் ஹசீனா ஜானு ஆகிய மூவரையும் போலிஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரெடிட் தளத்தில் 30 வயது நிரம்பிய நபர் ஒருவர் தனது நிதி நிலைமை குறித்துப் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பெரும்…
அசாம் மாநிலம் போங்கைகாவோன் பகுதியைச் சேர்ந்த சமேஷ் மொண்டல் என்பவர் நள்ளிரவில் மிகுந்த பசியோடு 'சொமாட்டோ' செயலி மூலம் 'கொல்கத்தா…
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணலால் (41) என்பவரின் மனைவி யாமினி. இவர்களது குடியிருப்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான…
மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டம், புனேஷ்வர் கோவில் அருகே 'தன்ஹா போலா' திருவிழாவையொட்டி பொழுதுபோக்கு பொருட்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. புல்சவாங்கி பகுதியைச்…
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு (25) என்ற இளைஞர், சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு தனியார்…
அசாம் மாநிலம் உடல்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் கிண்டோ என்பவரும், குரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதில் குரியா…