வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீஸ் ஆவதால் இணையத்தில் விவாதங்கள் அனல் பறக்கின்றன. விஜய்யின் அரசியல் வருகையினால் அவரது இடத்தை சிவகார்த்திகேயன் பிடிக்கப் போகிறார் என்ற பேச்சுகள் நிலவி வரும் சூழலில், இந்த நேரடி மோதல் விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சிவகார்த்திகேயன் வேண்டுமென்றே விஜய்க்குப் போட்டியாகக் களமிறங்குவதாகச் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசியுள்ள சிவகார்த்திகேயன், தனக்கு விஜய் சாருடன் மோதும் எண்ணம் துளியும் இல்லை என்றும், ஒரு பெரிய நடிகரான அவருடன் தன்னால் போட்டி போட முடியாது என்றும் பணிவுடன் தெரிவித்துள்ளார்.
ஒரு விடுமுறை நாளில் தங்களது படம் வெளியாக வேண்டும் என்பது எல்லா நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பொதுவான ஆசைதான் என்றும், அதுவே தற்போதைய ரிலீஸ் முடிவுக்குக் காரணம் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். திட்டமிட்ட மோதல் எதுவும் இல்லை என அவர் தெளிவாகக் கூறியுள்ள போதிலும், பொங்கல் ரேஸில் ஜெயிக்கப்போவது யார் என்பதைப் பார்க்கத் திரை உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…