கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த லாட்ஜில் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக சகலேஷ்பூரில் உள்ள கிராபோர்ட் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் உயிரிழந்ததற்கான காரணத்தைக் கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம்பெண்ணின் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவர் யார், எதற்காக அந்த லாட்ஜிற்கு வந்தார், அவருடன் யாரேனும் தங்கினார்களா என்பது குறித்து லாட்ஜ் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து மர்ம மரணம் குறித்த ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…
ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு…