செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர், நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டுத் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு பைபாஸ் பழவேலி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் அவர் வாகனத்திற்குப் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தபோது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட வெறிபிடித்த கும்பல் அவரை திடீரெனச் சுற்றி வளைத்தது. கண் இமைக்கும் நேரத்திற்குள் மறைத்து வைத்திருந்த கூர்மையான அரிவாள்களால் வீரமுத்துகிருஷ்ணனைச் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆகாஷ் என்பவரை வெட்டிக் கொன்று ஏரியில் புதைத்த வழக்கில் வீரமுத்துகிருஷ்ணன் முக்கிய குற்றவாளியாக இருந்த நிலையில், அதற்குப் பழிதீர்க்கவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நீதிமன்றத்தில் இருந்து அவரைப் பின்தொடர்ந்து வந்த கொலையாளிகள் பெட்ரோல் பங்க்கில் வைத்து இக்கொடூரத்தைச் அரங்கேற்றியுள்ளனர். இச்சம்பவம் குறித்துச் செங்கல்பட்டு தாலுகா போலிஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மர்மக் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…