திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 14 வயது சிறுமியை அவரது தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு வெளிச்சத்திற்கு வந்தது. இதில் அந்த சிறுமி கர்ப்பமானதைத் தொடர்ந்து, அவரது தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை மாவட்ட காவல்துறை மிகத் தீவிரமாக விசாரித்து, அனைத்து ஆதாரங்களையும் குறுகிய காலத்திலேயே திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்த வழக்கை விசாரித்த நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பெற்ற மகளுக்கே பாதுகாப்பு அளிக்க வேண்டிய தந்தையே இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது மன்னிக்க முடியாத சமூகக் குற்றம் என்று கூறி குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். மேலும், குற்றவாளிக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் நடந்த 7 மாதங்களிலேயே விரைவாக விசாரணை முடிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…