Categories: சினிமா

மல்டி மில்லியனர் மாதிரி வந்த முத்து – மீனா.. போனை அலேக்காக தூக்கிய வித்யா.. சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு..!

Spread the love

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில், ரோகிணி தங்களது திருமண நாளில் மீனாவும் ஸ்ருதியும் பெரிய பணக்கார வீட்டு பொண்ணுங்க போல இருக்கணும் என்று கூறிக் கொண்டிருக்கிறார். முத்து 50 காருக்கு ஓனர், ரவி சொந்தமா ரெஸ்டாரன்ட் வச்சிருக்காங்க என்று நாங்க பொய் சொல்லி இருக்கோம் அதுக்கு தகுந்த மாதிரி தான் நீங்களும் நடிக்கணும் என்று இருவரிடமும் ரோகிணி கூற அதற்கு மீனா இந்த பொயெல்லாம் என்னால சொல்ல முடியாது உங்க பிசினஸ்க்காக ஏன் இப்படி பொய் சொல்றீங்க உண்மையை சொல்லி நடக்கலாம் இல்லை என்று அறிவுரை கூறுகிறார். ஸ்ருதி தனது கணவர் பற்றி நீங்கள் எப்படி எப்படி சொல்லலாம் என்று அவரும் ரோகினி இடம் சண்டை போடுகிறார். பிறகு முத்துவும் ரவியும் இதற்கு ஒத்துக்கிட்டாங்க அப்படின்னு ரோகினி கூற இறுதியாக மீனாவும் ஸ்ருதியும் இந்த நாடகத்திற்கு ஒப்புக் கொள்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து முத்துவும் மீனாவும் இரவு நேரத்தில் மனோஜ் மற்றும் ரோகினி விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அவங்க திருட்டுத்தனம் பண்றது மட்டுமல்லாமல் நம்பளையும் அதுல சேர்த்துவிட பார்க்கிறார்கள் என்று முத்து மீனாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார். பிறகு அனைவரும் நிகழ்ச்சிக்கு ரெடியாகி கொண்டிருக்கும் சமயத்தில் விஜயா ஆளை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி வித்தியாசமான லுக்கில் வருகிறார். அவரைப் பார்த்து கணவரும் அழகில் மயங்கி அவரை வர்ணிக்கிறார். நான் உன்ன கல்யாணம் பண்ணும் போது கூட நீ அவ்வளவு அழகா இல்ல இப்போ ஹீரோயினி மாதிரி இருக்க என்று கூறி அவரும் வர்ணிக்கிறார். அந்த சமயத்தில் ரவியும் ஸ்ருதியும் அங்கு வர இருவரையும் விஜயா சூப்பரா இருக்கீங்க என்று கூறுகிறார்.

பிறகு ரோகிணியும் வித்தியாவும் சேர்ந்து இன்னைக்கு எப்படியாவது முத்துவின் போனை எடுத்து விட வேண்டும் என்ற பிளான் போடுகின்றனர். தொடர்ந்து மனோஜூம் ரோகிணியும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு உள்ளே வர அனைவரும் கைத்தட்டி அவர்களை வரவேற்கின்றனர். அந்த சமயத்தில் விஜயா என் பிள்ளைங்க ரெண்டு பேரும் எப்படி பணக்கார வீட்டு பிள்ளைங்க மாதிரி ஜொலிக்கிறாங்கன்னு பாரு முத்துவும் மீனாவும் பயந்து ஓடி இருப்பாங்க என்று கலாய்க்கிறார். அந்த சமயத்தில் அனைவருக்குமே டஃப் கொடுக்கும் வகையில் வித்தியாசமான லுக்கில் மீனாவும் முத்துவும் உள்ளே வந்து கலக்குகின்றனர்.

அனைவரும் அவர்களைப் பார்த்து வியக்கின்றனர். பிறகு முத்துவும் மீனாவும் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வித்யா உள்ளே நுழைந்து முத்துவிடமிருந்து போனை வாங்கும்போது மனோஜ் திடீரென வந்து போனை தட்டி விடுகிறார். அவசரமா குறுக்க வந்ததுனால ஃபோன் கீழே விழுந்துடுது. உடனே முத்து போனை வாங்கி மனோஜை திட்டிவிட்டு நாங்களே போட்டோ எடுத்துக்கிறோம் நீ கிளம்பு என்று வித்யாவிடம் கூறுகிறார். கடைசியா பண்ண பிளானும் சொதப்பியதால் டென்ஷனில் ரோகிணி இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Nanthini

Recent Posts

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

2 minutes ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

16 minutes ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

22 minutes ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

24 minutes ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

29 minutes ago

“நான் கனவு காண்கிறேனா?”… வீட்டிற்குள் கேட்ட கீச் கீச் சத்தம்!… வீட்டைத் திறந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி… 90 முட்டைகள் தானாகவே பொரிந்த அதிசயம்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ!

வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…

31 minutes ago