ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை மறக்க முடில.. எனக்கு அவுங்கள பிடிக்காது.. சில்க் ஸ்மிதா குறித்து ஓப்பனாக பேசிய ஷகிலா..

By Sumathi

Updated on:

நேற்று முன்தினம் நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த நாள். பலரும், சில்க் ஸ்மிதா குறித்த நினைவுகளை, சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தனர். இன்றும் சில்க் ஸ்மிதாவை மறக்காத அளவுக்கு ரசிகர்களின் மனதில் அவர் இருக்கிறார். அவரை போலவே, சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகை ஷகிலா. ஒரு கட்டத்தில், பலரது கனவுக்கன்னியாக ஷகிலா இருந்தார் என்பதே உண்மை.

Shakila

   

ஒரு நேர்காணலில் நடிகை ஷகிலா, சில்க் ஸ்மிதா குறித்து கூறியதாவது, உலக அழகி என்றால், அது சில்க் ஸ்மிதா தான். அவரை படங்களில் இப்போது பார்க்கும்போது கூட, எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று என் மனதில் தோன்றுகிறது. அவர் இறந்து பல ஆண்டுகள் ஆன நிலையில், அவரை நான்தான் சினிமாவுக்கு அறிமுகம் செய்தேன், அவருக்கு வெள்ளி நகைகள் ரொம்ப பிடிக்கும் என அவரை பற்றிய பொய்யான தகவல்களை சொல்பவர்களை பார்க்கும்போது எனக்கு கோபமாக வரும். அவர் ஷூட்டிங் நடிக்கும்போது, வெறு ஒரு கெட்டப்பில் மேக்கப் செய்வது என்றால், அப்படியே செய்ய மாட்டார். ரூமுக்கோ, ஓட்டலுக்கோ சென்று குளித்துவிட்டு பிரஷ்ஷாக தான் மறுபடி அந்த மேக்கப்பை போட்டுக்கொள்வார். அந்தளவுக்கு தொழிலில் அவர் அக்கறையாக இருந்தார்.

Shakila

அவருடன் முதல் படத்தில் நான் அறிமுகமானேன். அந்த படத்தில் அவர் எனக்கு அக்காவாக நடித்திருந்தார். அவரது தங்கையாக முதல் படத்திலேயே அறிமுகமானது எனக்கு பெரிய சந்தோஷம்தான். ஆனால், ஷூட்டிங்கில் ஒரு காட்சியில் நடித்த போது, அவர் நிஜமாகவே என்னை அறைந்துவிட்டார். என் கன்னத்தில் பளார் என அவர் அறைந்ததால் நான் அழுதுவிட்டேன். எனக்கு கோபமாக வந்தது. அத்தனை பேர் முன்னிலையில், சில்க் ஸ்மிதா அறைந்தது எனக்கு அவமானமாக இருந்தது.

Shakila

ஏன் இப்படி அறைச்சீங்க அக்கா என, அவரிடம் தனியாக சென்று கேட்ட போது, அது ஈஸியா ஷாட்ல வந்துடும். அதான் அறைஞ்சனே்னு சொன்னாங்க. அவங்களை பத்தி, நான் என்ன வேணாலும் தப்பா, சரியா பேச முடியும். அவங்க வீட்டுல சாப்பிடுவேன், அவங்க கூட இருப்பேன், அப்படீன்னு பொய் சொல்ல முடியும். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. என்னை அவங்க ஷூட்டிங் ஸ்பாட்டுல அறைஞ்சதால அப்ப, சிலக் ஸ்மிதாவை எனக்கு பிடிக்கலை அப்படீங்கறதுதான் உண்மை என்று கூறியிருக்கிறார் ஷகிலா.

author avatar
Sumathi