Connect with us

CINEMA

‘நான் திறமைசாலி… நீ அதிர்ஷ்டசாலி… நான் உன்ன தேடி வர்றமாதிரி இருக்கு’- ரஜினியை நேருக்கு நேர் நோஸ் கட் செய்த பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் நடிகவெள் என்று அழைக்கப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் ராதாரவி. அவரது நடிப்புப் பாணிக்கு நாம் யாரையும் முன்னோடி என்று சொல்ல முடியாது. ஆனால் அவரது நடிப்பைப் பின்பற்றி மணிவண்ணன், விவேக் மற்றும் அவரது மகன் ராதா ரவி ஆகியோர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர்.

எம் ஆர் ராதாவின் மகனான ராதாரவி தமிழ் சினிமாவில் 80 களில் இருந்து வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருந்து வருகிறார். ஒரு கட்டத்தில் ரஜினியின் பெரும்பாலான படங்களில் அவர் வில்லனாக நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் ரஜினி தன் படங்களில் அவரை தவிர்த்தார். பல ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் லிங்கா படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.

   

இந்நிலையில் ரஜினிக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரிவுக்குக் காரணமான சம்பவம் பற்றி ராதாரவி பகிர்ந்துள்ளார். அதில் “முதலில் அருணாச்சலம் படத்தில் நான்தான் வில்லனாக நடிக்க வேண்டியது. அப்போது இயக்குனர் பி வாசு. ஆனால் இடையில் கதை மாறி இயக்குனராக சுந்தர் சி வந்தார். மேலும் கதையில் ஒரு வில்லனாக இருந்ததை மாற்று மூன்று வில்லனாக ஆக்கிவிட்டார்கள்.

என்னை அழைத்த ரஜினி ‘இப்போது கதையில் மூன்று வில்லன்கள். அதில் ஒருவராக நீங்கள் நடித்தால் நன்றாக இருக்காது என்பதால் வேறு சிலரை ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.’ எனக் கூறினார். எனக்கு இது வேதனையை ஏற்படுத்தியது. அவரிடம் நான் “என் திறமை, உன் அதிர்ஷ்டத்தை தேடி வர வேண்டியதாக இருக்கிறது. அதுதான் சினிமாவின் சாபம்” எனக் கூறினேன். அதைக் கேட்டு பயங்கரமாக சிரித்தார். சூப்பரா சொன்னீங்க என்றார்.

அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது. இனிமேல் இவர் நம்மை அவர் படங்களுக்குக் கூப்பிட மாட்டார் என்று” என ஓப்பனாக பகிர்ந்துள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top