Connect with us

வீட்டு வாடகை குடுக்கணும்.. கல்யாணமாகி 2 பொம்பள பசங்க இருக்காங்க.. நாதஸ்வரம் சீரியல் நடிகரின் தற்போதய நிலை..!

CINEMA

வீட்டு வாடகை குடுக்கணும்.. கல்யாணமாகி 2 பொம்பள பசங்க இருக்காங்க.. நாதஸ்வரம் சீரியல் நடிகரின் தற்போதய நிலை..!

நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில் நடிக்கும் பல நடிகர்கள் ஒரு சில சீரியலுக்கு பின்பு காணாமல் போய்விடுகிறார்கள். அப்படி வாய்ப்பு கிடைக்காமல் சொந்த ஊருக்கு சென்று பல நடிகர்கள் வேறு வேலையை பார்த்து வருகிறார்கள்.

நாதஸ்வரம் சீரியல் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர்தான் காஜா. திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த நாதஸ்வரம் சீரியல் நடித்த பிரபலமான காஜாவின் சொந்த ஊர் தர்மபுரி சிறுவயதிலிருந்து சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்த இவர் நாதஸ்வரம் சீரியல் ஆடிஷன் சென்று செலக்ட் ஆனார். அதன் பிறகு தனக்கு வாய்ப்பு கிடைக்க அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்து அசத்தியிருந்தார்.

   

 

சீரியலில் கடைசிவரை காஜாவின் காட்சி இருப்பது போன்று கதை அமைந்தது. சீரியலில் நடிக்கும் போது ஒரு குடும்பமாக இருந்த நிலையில் பின்பு வாய்ப்பு கிடைக்காமல் போனதாக கூறினார். சொந்த ஊர் சென்று காஜா தற்போது ஸ்மார்ட் மொபைல்ஸ் என்ற கடையில் வேலை செய்து வருகிறார். தான் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்துவிட்டால் தனது குடும்பத்தினரை யார் பார்த்துக் கொள்வார்கள்.

அதுமட்டுமில்லாமல் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தால் ரூம் எடுத்து தங்கி வாய்ப்பு தேட வேண்டி இருக்கும் ரூம் வாடகை கொடுக்க வேண்டும். நான் சென்னை வந்து விட்டால் எனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு யாரும் கிடையாது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அதனால் சொந்த ஊரிலேயே வேலை செய்து வருகிறேன். திருமுருகன் அவர்கள் மீண்டும் ஏதாவது வாய்ப்பு கொடுத்தால் சென்னைக்கு வந்து நடிப்பேன் என்று வருத்தத்துடன் கூறியிருந்தார். இந்த பேட்டியானது தற்போது வைரலாகி வருகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top