தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கட்சியை பலப்படுத்தும் முயற்சியிலும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் பல வியூகங்களை வகுத்து வருகின்றார். குறிப்பாக அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் கட்சியில் இணைந்த பிறகு தமிழக வெற்றி கழகம் கட்சியின் பலம் மேலும் கூடியுள்ளது. இதனால் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியை இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள விஜய் சமீபத்தில் புதுச்சேரியில் பிரச்சார கூட்டத்தை நடத்தி முடித்தார்.
இந்நிலையில் ஈரோடு சத்தியமங்கலம் டோல்கேட் அருகே உள்ள சரளை பகுதியில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி விஜயின் பரப்புரை உறுதி செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் அறிவித்துள்ளார். காலை 11:00 மணி முதல் பிற்பகல் ஒரு மணிக்குள் நிகழ்ச்சியை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதேசமயம் ஈரோட்டில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல் கசிந்து உள்ளது. பரப்புரை நடைபெற உள்ள இடம் HRCE இன் கீழ் உள்ளதால் அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோருக்கு அத்துறையின் அதிகாரிகள் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…