தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கட்சியை பலப்படுத்தும் முயற்சியிலும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் பல வியூகங்களை வகுத்து வருகின்றார். குறிப்பாக அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் கட்சியில் இணைந்த பிறகு தமிழக வெற்றி கழகம் கட்சியின் பலம் மேலும் கூடியுள்ளது. இதனால் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியை இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள விஜய் சமீபத்தில் புதுச்சேரியில் பிரச்சார கூட்டத்தை நடத்தி முடித்தார்.
இந்நிலையில் ஈரோடு சத்தியமங்கலம் டோல்கேட் அருகே உள்ள சரளை பகுதியில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி விஜயின் பரப்புரை உறுதி செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் அறிவித்துள்ளார். காலை 11:00 மணி முதல் பிற்பகல் ஒரு மணிக்குள் நிகழ்ச்சியை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதேசமயம் ஈரோட்டில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல் கசிந்து உள்ளது. பரப்புரை நடைபெற உள்ள இடம் HRCE இன் கீழ் உள்ளதால் அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோருக்கு அத்துறையின் அதிகாரிகள் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது
