சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நீட் தேர்வுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் முன்னணித் திரைக்கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகர் கலையரசன் மற்றும் பாடகர் அறிவு உள்ளிட்ட பலர் நேரில் பங்கேற்றனர். டெல்லியில் போராடும் மாணவர்களுக்குத் தோள்கொடுக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில், மருத்துவச் சேர்க்கையில் நீட் தேர்வு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துப் பேச்சாளர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ‘நீட் தேர்வு வேண்டாம்’ என்றும், மத்திய அரசின் கல்வி மற்றும் தேர்வு முறைக் கொள்கைகளுக்கு எதிராகவும் வலுவான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்கவும், மாநில உரிமைகளை மீட்கவும் நீட் தேர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உறுதியாக வலியுறுத்தினர்.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக…
பாலில் உடலுக்குத் தேவையான கால்சியம், புரதம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், "அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு" என்பதற்கு ஏற்ப…
விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தில் அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகள் நிறைந்திருப்பதால், தணிக்கைக் குழு இப்படத்திற்கு 'ஏ' (18 வயதுக்கு…
மிசோராமில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தின் போது, நூற்றுக்கணக்கான சிஜேபி அமைப்பைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் "3 இடியட்ஸ்" திரைப்படத்தின் புகழ்பெற்ற "கிவ்…
பெங்களூரின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள தேவநஹள்ளியில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஒரு பெண்…
சமீபகாலமாக பல பகுதிகளில் வீதிகளில் திரியும் தெருக்காளைகளால் பொதுமக்களும் பள்ளி குழந்தைகளும் பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில்,…