“களத்தில் இறங்கிய பா.ரஞ்சித், பாடகர் அறிவு…! நீட் தேர்வு வேண்டாம்” எனச் சென்னையில்… விஸ்வரூபம் எடுக்கும் போராட்டம்…!!”

By Swetha on ஆடி 23, 2026

Spread the love

சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நீட் தேர்வுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் முன்னணித் திரைக்கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகர் கலையரசன் மற்றும் பாடகர் அறிவு உள்ளிட்ட பலர் நேரில் பங்கேற்றனர். டெல்லியில் போராடும் மாணவர்களுக்குத் தோள்கொடுக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில், மருத்துவச் சேர்க்கையில் நீட் தேர்வு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துப் பேச்சாளர்கள் சுட்டிக்காட்டினர்.

   

ஆர்ப்பாட்டத்தின் போது, ‘நீட் தேர்வு வேண்டாம்’ என்றும், மத்திய அரசின் கல்வி மற்றும் தேர்வு முறைக் கொள்கைகளுக்கு எதிராகவும் வலுவான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்கவும், மாநில உரிமைகளை மீட்கவும் நீட் தேர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உறுதியாக வலியுறுத்தினர்.