ஈரான் போரினால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்விளைவுகளைச் சமாளிக்க முடியாமல், அமெரிக்காவின் பிரபல பட்ஜெட் விமான நிறுவனமான ‘ஸ்பிரிட் ஏர்லைன்ஸ்’ (Spirit Airlines) தற்போது மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் திவால் நிலையில் இருந்த இந்நிறுவனம், போரினால் ஏற்பட்ட கடுமையான பொருளாதாரச் சரிவு மற்றும் நிதி நெருக்கடி காரணமாகத் தனது சேவையை முழுவதுமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
இந்நிறுவனத்தை மீட்பதற்காகத் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட அரசு உடைமையாக்கும் முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. இதன் விளைவாக, ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தற்போது வேலையிழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் முக்கியமான விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் மூடப்படுவது சர்வதேச விமான போக்குவரத்துத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக்…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, மலேசியப் பிரதமர் அன்வார்…
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், திருமணம் முடிந்த பதினைந்தே நாட்களில் புதுப்பெண் பிரகதி, தனது கணவர் திலீப்பை கூலிப்படை ஏவிக்…
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ள சூழலில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான சி.வி.சண்முகம் MLA இன்று செய்தியாளர்களைச்…
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பிரதிநிதிகள், இன்று (மே 12) தலைமைச் செயலகத்தில் தமிழக…