இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயில் போக்குவரத்து என்பது மிகக் குறைந்த கட்டணத்திலும் சௌகரியமாகவும் இருப்பதால் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இப்படி தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிப்பதால் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே அடிக்கடி புதிய சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கான சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி ரயிலில் முன்பதிவு செய்யும்போது 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 58 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் சீனியர் சிட்டிசன் விருப்பத்தை தேர்வு செய்து Lower Berth சீட்டை தேர்வு செய்து கொள்ளலாம். டிக்கெட் உறுதி செய்யப்பட்டால் கீழ் பெர்த் கிடைக்கும். ஒருவேளை கிடைக்கவில்லை என்றால் டிக்கெட் பரிசோதகர் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சீனியர் சிட்டிசன்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…