காதலனுடன் வாழ கணவனுக்கு ‘ஸ்கெட்ச்’.. ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவி செய்த கொடூரம்… வெளிச்சத்திற்கு வந்த திடுக்கிடும் உண்மை ….!

Spread the love

தெலுங்கானா மாநிலம் மஞ்சீரியாளா மாவட்டத்தில், காப்பீட்டுப் பணத்திற்காகத் தன் கணவனையே கூலிப்படை வைத்துத் தீர்த்துக்கட்டிய மனைவியின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாஜிபூர் மண்டலத்தைச் சேர்ந்த 45 வயதான சாயினி குமார் என்பவர் கடந்த 22-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது நேரிட்ட விபத்தில் உயிரிழந்ததாக முதலில் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. பார்ப்பதற்கு சாதாரண சாலை விபத்து போல் தோன்றினாலும், போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் சில சந்தேகங்கள் எழவே, இந்த மரணத்தின் பின்னணியில் இருந்த அதிர்ச்சியூட்டும் கொலைச் சதி அம்பலமானது.

விசாரணையில், சாயினி குமாரின் மனைவி பாரதிக்கும், குடிபேட்டையைச் சேர்ந்த லக்கிசெட்டி சுரேந்தர் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. கணவன் உயிருடன் இருந்தால் தங்களது கள்ள உறவிற்குத் தடையாக இருப்பார் என்று பாரதி கருதியுள்ளார். அதே வேளையில், தன் கணவர் சாயினி குமாரின் பெயரில் எல்.ஐ.சி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்குப் பெரும் தொகையை டேர்ம் இன்சூரன்ஸாகப் பாரதி எடுத்து, அதற்கான பிரீமியத்தையும் தொடர்ந்து கட்டி வந்துள்ளார். கணவர் விபத்தில் இறந்தால் இந்த 2 கோடி ரூபாய் காப்பீட்டுப் பணம் மொத்தமாகக் கிடைக்கும் என்பதால், காதலனுடன் சேர்ந்து வாழவும் பணக்காரர் ஆகவும் பாரதி ஒரு கொடூரத் திட்டத்தைத் தீட்டினார்.

இதற்காக, தன் கணவருக்குக் கடன் கொடுத்திருந்த ராம் மல்லேஷ் என்பவரை அணுகிய பாரதி, கணவரைக் கொலை செய்தால் 10 லட்சம் ரூபாய் தருவதாகப் பேரம் பேசி, முன்பணமாக 2 லட்சம் ரூபாயையும் கொடுத்துள்ளார். அதன்படி, கடந்த 22-ஆம் தேதி ஸ்ரீராம் என்பவருடன் சேர்ந்து, திட்டமிட்டபடி சாயினி குமாரை முல்கல் கிராமம் அருகே உள்ள ஓர் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று அதிகளவில் மது அருந்த வைத்துள்ளனர். பின்னர், இரும்பு கத்தியால் அவரது தலையில் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துவிட்டு, அதைச் சாலை விபத்து போலக் காட்டுவதற்காக, அவரது உடலை இருசக்கர வாகனத்துடன் சாலையோரத்தில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இன்சூரன்ஸ் பணத்தைப் பெற இன்றைக்குப் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில், பணத்தாசையாலும் கள்ளக்காதலாலும் கணவனையே காலி செய்யத் துணிந்த இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டிய மனைவி பாரதி, அவரது கள்ளக்காதலன் சுரேந்தர் மற்றும் கொலையில் தொடர்புடைய ஸ்ரீராம் ஆகிய மூன்று பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த இன்சூரன்ஸ் ஆவணங்களையும், 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் முக்கியக் குற்றவாளியான ராம் மல்லேஷை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

6 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

6 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

7 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

7 மணத்தியாலங்கள் ago