அலட்சியத்தால் ஒரு உயிரே போச்சே..! காதில் ப்ளூடூத் இயர்போன்… கையில் மொபைல் போன்.. அலட்சியமாக ஊசி போட்ட செவிலியர்… துடிதுடித்து உயிரிழந்த நோயாளி…!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் (BMC), செவிலியரின் கவனக்குறைவால் நோயாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டையில் ஏற்பட்ட சதை வளர்ச்சி காரணமாக அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நோயாளிக்கு, தகுந்த மருத்துவக் கண்காணிப்பு இல்லாமல் முன்கூட்டியே ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நோயாளியின் மனைவி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், நோயாளிக்கு நரம்பு வழியாக ஊசி செலுத்தும்போது, அங்கிருந்த செவிலியர் தனது மொபைல் போனைப் பயன்படுத்திக் கொண்டும், ப்ளூடூத் இயர்போனை காதில் மாட்டிக் கொண்டும் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அதீத ஆபத்துள்ள மயக்க மருந்து ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே நோயாளிக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அந்த நோயாளி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட செவிலியரை மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்துள்ளது. மேலும், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேந்திர சுக்லா இந்த அலட்சியம் குறித்து விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

BREAKING: “ராஜினாமா செய்ய மாட்டேன்” வைகோவின் உத்தரவை அதிரடியாக மறுத்த மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன்… அரசியலில் திடீர் டுவிஸ்ட்..!!

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடையநல்லூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்ய…

20 minutes ago

என்னைக் காப்பாத்துங்க… அன்பு ஆபத்தாய் மாறிய விநோதம்… குரங்குகளுக்கு பழம் கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?… தூத்துக்குடியை உலுக்கிய மரணம்…!

தூத்துக்குடி மாவட்டத்தில் குரங்குகள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பதற்றத்தில், மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம்…

22 minutes ago

பங்காளிகளின் வெறிச்செயல்..! நிலத்துக்காகப் பிறந்த உடன்பிறப்புகளைத் தீர்த்துக்கட்டிய உறவினர்கள்.. தருமபுரியை உலுக்கிய இரட்டைக் கொலை..!!

தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…

31 minutes ago

25 வயதிலேயே மாரடைப்பா?… ‘ஈஸ்ட்ரோஜன்’ தீர்ந்ததும் பெண்களுக்கு வரும் ஆபத்து… திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் பதறாமல் முதலில் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்…!

மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…

38 minutes ago

“இது பொய்யாக இருக்கக்கூடாதா..?” இயக்குநர் பாக்யராஜ் மறைவு குறித்து சீமான் உருக்கம்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…

45 minutes ago

மதிமுக வெளியேறியதற்கு இதுதான் காரணமா..? திருமண விழாவில் ஸ்டாலின் – வைகோ இடையே நடந்தது என்ன..? பரபரப்பு பின்னணி..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…

48 minutes ago