என்னைக் காப்பாத்துங்க… அன்பு ஆபத்தாய் மாறிய விநோதம்… குரங்குகளுக்கு பழம் கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?… தூத்துக்குடியை உலுக்கிய மரணம்…!

Spread the love

தூத்துக்குடி மாவட்டத்தில் குரங்குகள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பதற்றத்தில், மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி தெற்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான அனிதா என்ற இளம்பெண்ணுக்கும், வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் 29 வயதான சுரேஷ் என்பவருக்கும் கடந்த மாதம் தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், சொந்த ஊர் திரும்பிய கணவருடன் இணைந்து அனிதா கழுகுமலையில் உள்ள புகழ்பெற்ற கழுகாசலமூர்த்தி கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

முக்கியக் கோவிலில் வழிபாட்டை முடித்த தம்பதியினர், அங்கிருந்து மலை உச்சியில் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அங்கிருந்த குரங்குகளுக்குப் பழங்களை உணவாகக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஏராளமான குரங்குகள் அவர்களைச் சுற்றிலும் திரண்டுள்ளன. இதனால் அனிதா கடும் அச்சமும் பதற்றமும் அடைந்துள்ளார்.

இந்த எதிர்பாராத கூட்டத்தாலும் பயத்தாலும் நிலைதடுமாறிய அனிதா, மலை உச்சியிலிருந்து திடீரென கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே தனது கணவரின் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கழுகுமலை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் காவல்துறையினரும் அனிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Visaka

Recent Posts

“உங்களை கையெடுத்து கும்பிடுறேன்… மனுஷன் உயிர் வேற”… பாக்யராஜ் உடலுக்கு முன்னால் கைகூப்பி கதறிய ராதிகா சரத்குமார்… கலங்க வைத்த அந்த ஒரு சம்பவம்..!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரும், நடிகருமான ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும்,…

2 minutes ago

ரூ.1 கோடி வசூல் யாரும் எதிர்பாராத சாதனை…! ரஜினி, கமல் படங்களை ஓரம் கட்டிய பாக்யராஜின் ‘அந்த’ படம் எது தெரியுமா…?

தமிழ் திரையுலகில் திரைக்கதை அமைப்பதில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்டவர் இயக்குநர் கே.…

5 minutes ago

செல்வப்பெருந்தகையின் பதவி பறிப்பு…. தமிழ்நாடு காங்கிரஸின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனம் உடனடியாக அமலுக்கு…

7 minutes ago

“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. அலறியடித்து ஓடிய பெண்”…. கண்ணிமைக்கும் நேரத்தில் சுற்றிய 10 குரங்குகள்… அடுத்த நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

சென்னை தாம்பரம் அருகே உள்ள கழுகுமலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலில், குரங்குகள் சூழ்ந்து கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலும்…

17 minutes ago

தமிழக அரசியலில் அடுத்த வெடி! “த்ரிஷாவிற்கு துணை முதல்வர் பதவி…?” வாய்விட்டு மாட்டிக்கொண்ட முன்னாள் அமைச்சர்…!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் இந்த காரசாரமான விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…

22 minutes ago

போடு ரகிட ரகிட…. இனி பத்திரப்பதிவு செய்வோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!

விவசாய நிலங்களின் வழிகாட்டி மதிப்பை தன்னிச்சையாக உயர்த்துவதற்கும், பல ஆண்டுகள் கழித்து கூடுதல் கட்டணம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கும் சென்னை…

24 minutes ago