போடு ரகிட ரகிட…. இனி பத்திரப்பதிவு செய்வோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!

Spread the love

விவசாய நிலங்களின் வழிகாட்டி மதிப்பை தன்னிச்சையாக உயர்த்துவதற்கும், பல ஆண்டுகள் கழித்து கூடுதல் கட்டணம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அப்துல் கலாம் அறிவியல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அபெல் மூர்த்தி மற்றும் திருமங்கலத்தைச் சேர்ந்த காசிமாயன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நிலத்தின் சந்தை மதிப்பை உயர்த்தும் அதிகாரம் மாவட்டப் பதிவாளருக்கு இல்லை என்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளது.

தங்களின் மனுவில் விவசாயிகள் தரப்பு, தற்காலத்தில் விவசாயத் தொழில் அழிவின் விளிம்பில் உள்ள நிலையில், குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக நிலங்களை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். அத்தகைய சூழலில், சந்தை மதிப்பை விட வழிகாட்டி மதிப்பை பல மடங்கு உயர்த்தி பத்திரப்பதிவு செய்வதால், நிலங்களை வாங்குவதற்கு யாரும் முன்வருவதில்லை என்றும், தமிழக அரசின் பதிவுத்துறை தனது சொந்த ஆதாயத்திற்காக தன்னிச்சையாக இந்த வழிகாட்டி மதிப்பை உயர்த்துவது சட்டவிரோதமானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2018-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு பத்திரத்திற்கு, 7 ஆண்டுகள் கழித்து 2025-ம் ஆண்டில் கூடுதல் கட்டணம் செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதைக் கண்டு கடும் அதிருப்தி வெளியிட்டனர். சொத்துகளுக்கான மதிப்பு வழிகாட்டுதல்களை நிர்ணயிப்பதும், அவற்றை மறுஆய்வு செய்வதும் அதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மதிப்பீட்டுக் குழுவால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பதுதான் சட்ட விதிமுறையாகும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, எந்தவித ஆதாரமும் இன்றி மாவட்டப் பதிவாளர் நிலத்தின் சந்தை மதிப்பைத் தன்னிச்சையாக நிர்ணயம் செய்து பிறப்பித்த உத்தரவு சட்டப்படி செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள சொத்தின் சந்தை மதிப்பை முதன்முறையாக நிர்ணயிப்பதற்கு உரிய குழுவிற்கு மட்டுமே தகுதி இருக்கிறது என்றும், பதிவுத்துறை அதிகாரிகள் தங்களின் வரம்புகளை மீறாமல், சட்ட விதிகளையும் வழிகாட்டுதல்களையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தங்களின் உத்தரவில் மிக உறுதியாக வலியுறுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ATM கார்டை பயன்படுத்தி மாத்திரையை நொறுக்கி டெமோ காட்டுங்க.. அமைச்சர் சரத்குமாருக்கு கீதாஜீவன் சவால்…!!

தமிழக அமைச்சர் டி. சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மொபைல் திரையில் மாத்திரையை நொறுக்கியதாகக் கூறிய விளக்கத்தை, திமுக முன்னாள்…

1 minute ago

“பெத்தவங்களை கஷ்டப்படுத்துறத விட கொல்லுறதே மேல்” இதுதான் ஈஸியான வேலை.. புனே கொலை வழக்கில் மணப்பெண்ணின் நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்…!!

புனே லோஹாகட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபரான கேதன் அகர்வால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட…

2 minutes ago

“அந்த வீடியோவ ரிலீஸ் பண்ணிடுவோம்” காதலனுடன் தனிமையில் இருந்ததை தோழியிடம் சொன்ன கல்லூரி மாணவி… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, சமூக வலைதளம் மூலமாக செஞ்சியைச் சேர்ந்த ஆதி மற்றும் சென்னையைச்…

6 minutes ago

“1 ரூபாய்க்கு டிரஸ்.. மல்லுக்கட்டிய மக்கள்” மாலில் நள்ளிரவு முதல் விடிய விடிய பரபரப்பு… கடைசியில் நடந்த டுவிஸ்ட்..!!

மும்பை மாலாடு பகுதியில் உள்ள இன்ஃபினிட்டி மாலில், வெறும் 1 ரூபாய்க்கு ஆடைகள் விற்பனை செய்யப்படும் என்ற விளம்பரம் சமூக…

9 minutes ago

திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய வைகோ…. திருச்சியில் நடுத்தெருவில் திமுகவினர் செய்த காரியம்… தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…

47 minutes ago

“உங்களை கையெடுத்து கும்பிடுறேன்… மனுஷன் உயிர் வேற”… பாக்யராஜ் உடலுக்கு முன்னால் கைகூப்பி கதறிய ராதிகா சரத்குமார்… கலங்க வைத்த அந்த ஒரு சம்பவம்..!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரும், நடிகருமான ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும்,…

52 minutes ago