“என் பொண்டாட்டியைக் கொன்னுட்டேன், இனி நீங்களே பாத்துக்கோங்க” வேளைக்கு போக சொன்னதுக்கு இப்படியா..? கர்ப்பிணியை கொலை செய்துவிட்டு மாமாவுக்கு போன் செய்த கணவன்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

Spread the love

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பஞ்சசீல் காலனி பகுதியில், 6 மாத கர்ப்பிணியான நேகா குமாரி (24) என்ற இளம்பெண் அவரது கணவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நேகா குமாரியும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அமித் குப்தா என்பவரும் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்து கொண்டு, தற்போது பஞ்சசீல் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அமித் குப்தா, சமீப நாட்களாக ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரைத் தவறாமல் வேலைக்குச் செல்லுமாறு நேகா அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தால் கணவன்-மனைவி இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அமித் குப்தா, கர்ப்பிணி என்றும் பாராமல் தனது மனைவியை கொடூரமாகத் தாக்கியுள்ளார். பின்னர் அவரது துப்பட்டாவால் கழுத்தை நெரிக்க முயன்றதோடு, வீட்டில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் நேகாவின் தலையை பலமுறை முக்கி, கொடூரமான முறையில் மூச்சுத்திணறடித்துக் கொலை செய்துள்ளார்.

இந்தக் கொடூரச் செயலைச் செய்த பின்னர், அமித் தனது மாமாவுக்குத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, “நான் என் மனைவியைக் கொலை செய்துவிட்டேன், இனி அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். நேகாவின் உறவினர்கள் அவரைத் தொடர்புகொள்ள முயன்று, அழைப்பை ஏற்காததால் நேரில் வந்து பார்த்தபோதுதான் அவர் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லா காவல் துறையினர், தடய அறிவியல் மற்றும் குற்றப்பிரிவு குழுவினருடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, தலைமறைவாக உள்ள அமித் குப்தாவை வலைவீசித் தேடி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

விஜய் போட்ட கையெழுத்து… பின்னால் நடக்கும் ரகசிய டீலிங்… தவெகவை அதிரவைக்கும் அந்த ஒரு நபர்…!

தமிழ்நாட்டை போதையற்ற மாநிலமாக மாற்றுவோம் என்ற உறுதியான முழக்கத்துடன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு…

2 minutes ago

BREAKING: “ராஜினாமா செய்ய மாட்டேன்” வைகோவின் உத்தரவை அதிரடியாக மறுத்த மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன்… அரசியலில் திடீர் டுவிஸ்ட்..!!

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடையநல்லூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்ய…

25 minutes ago

என்னைக் காப்பாத்துங்க… அன்பு ஆபத்தாய் மாறிய விநோதம்… குரங்குகளுக்கு பழம் கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?… தூத்துக்குடியை உலுக்கிய மரணம்…!

தூத்துக்குடி மாவட்டத்தில் குரங்குகள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பதற்றத்தில், மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம்…

26 minutes ago

பங்காளிகளின் வெறிச்செயல்..! நிலத்துக்காகப் பிறந்த உடன்பிறப்புகளைத் தீர்த்துக்கட்டிய உறவினர்கள்.. தருமபுரியை உலுக்கிய இரட்டைக் கொலை..!!

தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…

35 minutes ago

25 வயதிலேயே மாரடைப்பா?… ‘ஈஸ்ட்ரோஜன்’ தீர்ந்ததும் பெண்களுக்கு வரும் ஆபத்து… திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் பதறாமல் முதலில் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்…!

மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…

43 minutes ago

“இது பொய்யாக இருக்கக்கூடாதா..?” இயக்குநர் பாக்யராஜ் மறைவு குறித்து சீமான் உருக்கம்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…

49 minutes ago