திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ராஜேஷ் என்பவருக்கும், கௌசல்யா என்ற 21 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகும் கௌசல்யா தனது பி.எட் படிப்பைத் தொடர்ந்து வந்தார். மகிழ்ச்சியாகத் தொடங்கிய இவர்களது மணவாழ்க்கை, வெறும் ஐந்தே மாதங்களில் கௌசல்யாவின் மர்ம மரணத்தோடு முடிவுக்கு வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 7-ம் தேதி கௌசல்யா வீட்டில் தவறி விழுந்து தலையில் அடிபட்டு இறந்துவிட்டதாக ராஜேஷ் நாடகமாடினார். ஆனால், கௌசல்யாவின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசாரும் ஆர்.டி.ஓ-வும் நடத்திய தீவிர விசாரணையில், கௌசல்யாவின் மரணம் விபத்தல்ல, அது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்தக் கொடூரச் செயலுக்குப் பின்னால் ராஜேஷின் திருமணத்தை மீறிய கள்ளக்காதல் உறவு இருந்தது அம்பலமானது. ராஜேஷ் தனது உறவினர் மகளான தீபிகா என்ற கல்லூரி மாணவியைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் ராஜேஷுக்கு கௌசல்யாவுடன் திருமணம் நடைபெற்றது. இருப்பினும், திருமணத்திற்குப் பிறகும் ராஜேஷ் தீபிகாவுடனான தனது ரகசிய உறவைத் தொடர்ந்து வந்துள்ளார்.
தங்களது இந்த முறையற்ற உறவுக்கு கௌசல்யா இடையூறாக இருப்பார் என்று கருதிய ராஜேஷும் தீபிகாவும், அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டனர். சம்பவத்தன்று கௌசல்யா தூங்கிக் கொண்டிருந்தபோது, ராஜேஷ் அவரைத் தலையணையால் அழுத்தியும், சுவற்றில் மோதியும் மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். தற்போது ராஜேஷ் மற்றும் அவரது காதலி தீபிகா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…