மும்பை விரார் ரயில் நிலையம் அருகே உள்ள நாரங்கி ரயில்வே கிராசிங் பகுதியில் வியாழக்கிழமை காலை சுமார் 9:30 மணியளவில் பெரும் சோகம் அரங்கேறியுள்ளது. வல்சாத் – மும்பை அதிவேக பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தின் தீவிரம் காரணமாக ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பெண் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தின் காரணமாக வல்சாத் எக்ஸ்பிரஸ் ரயில் நீண்ட நேரம் தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால் மும்பை நோக்கிச் செல்லும் ரயில் போக்குவரத்து, குறிப்பாக காலை நேரப் பணி நேரங்களில் (Peak Hours) கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சர்ச்கேட் நோக்கிச் செல்லும் உள்ளூர் ரயில்கள் (Local trains) மற்றும் தூரப் பகுதிக்குச் செல்லும் பிற எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் தவித்த நிலையில், போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…