ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான திருநங்கை நடிகை ஒருவர் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். வில்லிவாக்கத்தை சேர்ந்த அந்த நடிகை நாஞ்சில் விஜயன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக நானும் நாஞ்சில் விஜயனும் பழகி வந்தோம். அவர் திருமணத்திற்கு முன்னதாகவே என்னுடன் பழகி பிறகு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த ஆறு மாத காலமாக என் செல்போன் எண்ணை பிளாக் செய்து என்னுடன் பேச மறுக்கின்றார். அவர் என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு தற்போது கைவிட்டு செல்ல முயற்சிக்கின்றார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த திருநங்கை நடிகை புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நாஞ்சில் விஜயன் தரப்பு கூறுகையில், புகார் அளித்த பெண் எனக்கு யார் என்று தெரியாது என கூறியுள்ளார்.
இந்நிலையில் நாஞ்சில் விஜயன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து சிரித்துக் கொண்டே மேடையில் பேசுவது போன்ற ஒரு பபோட்டோவிற்கு”உன்னை பற்றி யாரு என்ன சொன்னால் என்ன… நீ இந்த காதில் வாங்கி அந்த காதில் விடு என்பது” என்ற பாடலைப் சேர்த்துள்ளார். அதற்கு ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக், “வா தலைவா வா தலைவா” என்று கமெண்ட் செய்ய. அதற்கு நாஞ்சில் விஜயன் “நன்றி ஐயா” என்று பதில் அளித்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…