சில மாதங்களாகவே இணையதளத்தில் புது ட்ரெண்டாக திரைபிரபலங்களின் சிறுவயது புகைப்படம் பரவலாகி வருகிறது. இந்த வரிசையில் ஜெமினிகணேசனுடன் நடிகை சுவாதி மற்றும் நடிகர் கயல் தேவராஜ் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
90 காலங்களில் திரையுலகில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுவாதி. 1995 ம் ஆண்டு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான “தேவா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின்பு, நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “வான்மதி” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.
மேலும் இவருக்கு பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. இவர் தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளார். நடிகை சுவாதி 2009 ல் தொழிலதிபர் கிரண் என்பவரை திருமணம்
செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிகை சுவாதி திரைப்படங்கள் நடிப்பதை முழுவதுமாக நிறுத்தினர். நடிகை சுவாதியின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் கயல் தேவராஜ், முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படத்தில் வெற்றி களம்கண்டவர். இவர் பல்வேறு கதாபாத்திரத்தில் திறமையாக நடிக்கும் வல்லமை பெற்றவர். “கயல்” திரைப்படத்தின் மூலம் பிரபலமானதால் இவர் கயல் தேவராஜ் என்ற அடைமொழியை பெற்றார். மேலும் ‘சங்கத்தமிழன்’, ‘என் ஆளோட செருப்பை காணும்’, ‘இரண்டாம் கருத்து’ போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…