தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு இசையும் மிக முக்கிய காரணம் தான். இளையராஜா தொடங்கி அனிருத் வரை இசையில் கோலோச்சிய பிரபலங்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக 90களில் இளையராஜாவை மிஞ்ச ஆளே கிடையாது. அதன் பிறகு ஏ ஆர் ரகுமான் வந்து சுமார் 20 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய நிலையில் பின்னர் அனிருத் அவருடைய இடத்தை நிரப்பினார். இதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோலிவுட்டில் அசுர வளர்ச்சி கண்ட அனிருத் இசையையும் மிஞ்சும் அளவுக்கு பிசியான இசை அமைப்பாளராக ஜிவி பிரகாஷ் மாறி உள்ளார். ஜிவி பிரகாஷுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதற்கு அனிருத் வீழ்ச்சியும் முக்கிய காரணமாகும்.
அனிருத் எந்த பாட்டு போட்டாலும் ஹிட் ஆகும் என்ற நிலை இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவரின் இசை ரசிகர்களுக்கு போர் அடிக்க தொடங்கி விட்டது. அவருடைய இசையில் இறுதியாக வெளியான இந்தியன் 2, தேவரா, வேட்டையன் மற்றும் விடாமுயற்சி என எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியுள்ளன. மறுபக்கம் ஜிவி பிரகாஷ் குமார் மவுசு அதிகரிக்க தொடங்கி விட்டது. அண்மையில் இவருடைய இசையில் வெளியான அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றனர்.
அது மட்டுமல்லாமல் அனிருத்தை காட்டிலும் சம்பள விஷயத்தில் ஜிவி பிரகாஷ் சீப் அண்ட் பெஸ்ட் ஆக திகழ்ந்து வருவதால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அனிருத் ஒரு படத்திற்கு 15 கோடி வரை சம்பளம் வாங்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் சம்பளம் 10 கோடிக்கும் குறைவுதான். அதன் காரணமாகவே தயாரிப்பாளர்கள் அவருக்கு பட வாய்ப்புகளை வழங்கிய வண்ணம் உள்ளனர். தற்போது அஜித் குமாரின் குட் பேட் அக்லி, தனுஷின் இட்லி கடை, கவினின் மாஸ்க், சிவகார்த்திகேயனின் பராசக்தி, ஜிவி பிரகாஷே ஹீரோவாக நடிக்கும் கிங்ஸ்டன், வெற்றிமாறனின் வாடிவாசல் என அவருடைய லைன் ஆப் நீண்டு கொண்டே செல்கின்றது.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…