தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வரும் வருகிறார். அவர் தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அதன்பிறகு அவர் இயக்கிய ஹவுஸ்ஃபுல், இவன், உள்ளே வெளியே போன்ற படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.
புதிய பாதை படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த சீதாவைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தின் உருவாக்கத்தின் போது இருவரும் காதலில் விழுந்தனர். அதன் பிறகு அவரை திருமணம் செய்துகொண்ட பார்த்திபன் 12 ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்தார்.
பார்த்திபன் தன்னுடைய சினிமா பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார் பார்த்திப்ன. நடிகராக சம்பாதிக்கும் பணத்தை இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் முதலீடு செய்து வித்தியாசமான படங்களை இயக்கி கையை சுட்டுக் கொள்கிறார். ஆனாலும் தொடர்ந்து வித்தியாசமானப் படங்களாகக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
பார்த்திபன் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் சக நடிகர்களோடு நடந்த சில சம்பவங்களை அவ்வப் போது பகிர்ந்து வருகிறார். அப்படி விஜய்யுடன் ஏற்பட்ட ஒரு சம்பவம் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் விஜய்யோடு சேர்ந்து படம் நடிக்கவில்லை. அவரை வைத்து படமும் இயக்கவில்லை. இனிமேல் இயக்கப் போவதுமில்லை. ஏனென்றால் அவரே தனது கடைசிப் படத்தை அறிவித்துவிட்டார்.
அவர் என் கவிதைகள் வேண்டும் என்று சொன்னதால் நான் அழகிய தமிழ் மகன் படத்தில் எழுதிக் கொடுத்தேன். ஒரே ஒருமுறை மட்டும் நான் ஏதோ டிரைலரோ, பாடலோ ரிலீஸ் செய்து தரும்படி கேட்டபோது ‘சாரி சார். நான் அதுபோல எல்லாம் செய்வதில்லை என்று உங்களுக்கேத் தெரியும். ஒருத்தருக்குப் பண்ணினால் எல்லோருக்கும் பண்ணவேண்டும்.” என்று மறுத்தார். அதை நான் புரிந்துகொண்டேன்” எனக் கூறியுள்ளார்.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…