“நாங்க உண்மையாக காதலிச்சோம்” அன்னைக்கு இதுதான் நடந்துச்சு… வாய்க்கு வந்தபடி பேசாதீங்க.. வீடியோ வெளியிட்ட கவினின் காதலி..!!

Spread the love

பாளையங்கோட்டை கேடிசி நகரில் வசித்து வருபவர் சரவணன். இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி இருவரும் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு சுர்ஜித் என்ற 24 வயது மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். இவருடைய மகளும் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயியின் மகனான கவின் குமாரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கவின் சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த நிலையில் கவின் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணை அடிக்கடி சந்தித்துள்ளார். வீட்டில் இந்த விஷயம் தெரிந்ததால் கவின்குமார் பழங்குடியினர் சமூகம் என்பதால் பெண் வீட்டார் இந்த பழக்கத்திற்கு மறுப்பு தெரிவித்துளர்கள்.

இதனைத்தொடர்ந்து ஆத்திரத்தில் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கவின் குமாரை பேச அழைத்து தான் மறைத்திருந்த வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டார். தற்போது சுர்ஜித்தை கைது செய்த நிலையில் அவருடைய தந்தை சரவணனையும் கைது செய்துள்ளது காவல்துறை. ஆனால் சுர்ஜித்தின் தாயையும் கைது செய்தால் தான் சுர்ஜித் உடலை வாங்குவோம் என்று கவினின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கவினின் காதலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நானும் கவினும் உண்மையாக காதலிச்சோம்.

கொஞ்சம் செட்டில் ஆக நேரம் தேவைப்பட்டது. மே 30 அன்று சுர்ஜித்தும், கவினும் பேசிக்கிட்டாங்க. பின்பு சுர்ஜித் அப்பாகிட்ட சொல்லிட்டான். அப்பா என்கிட்ட இதுபற்றி கேட்டபோது இல்ல அப்பான்னு சொல்லிட்டேன். ஏன்னா கவின் என்கிட்ட இன்னும் ஒரு 6 மாதத்தில் சொல்லுன்னு டைம் கேட்டிருந்தான். அதுனால அப்பாகிட்ட சொல்லல. அதற்குள் சுர்ஜித் கவினை என்னை பெண் பார்க்க வரச்சொல்லி அழைத்துள்ளான். சம்பவத்தன்று என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது. நான் 28 ஆம் தேதி மாலையில் தான் வர சொல்லியிருந்தேன். அவங்க தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைன்னு கூட்டிட்டு வந்திருக்காங்க. வந்துட்டு தான் எனக்கு சொன்னாங்க.

நான் அவங்க அம்மா, தாத்தாவை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போயிட்டு அவங்ககிட்ட தான் பேசிட்டு இருந்தேன். ஆனா கவின் கிளம்பி வெளியே போயிட்டான். அவங்க அம்மா கவினுக்கு கால் பண்ணினாங்க அவன் எடுக்கல. அதனால் நான் நீங்க சாப்பிட போங்க நான் வர சொல்றேன்னு சொன்னேன். அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. இதை தேவையில்லாம யாரும் வதந்தி கிளப்பி வேண்டாம். உங்களுக்கு தோணுறதை பேசாதீங்க. எங்க அப்பா அம்மாவுக்கு இதுபத்தி தெரியாது. இதோட இதை விட்ருங்க விட்ருங்க அவ்ளோதான் என பேசியுள்ளார்.

Soundarya

Recent Posts

“நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்: வெள்ள நீரில் பாய்ந்த மின்சாரம்… மடிந்து விழுந்த கல்லூரி மாணவிகள்… பதறவைக்கும் நேரடி வீடியோ…!!”

நவி மும்பையின் நெரூள் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரில் மின்சாரம் பாய்ந்ததில், இரண்டு கல்லூரி மாணவிகள் படுகாயமடைந்து…

3 minutes ago

“வேலுமணியைத் தொடர்ந்து அடுத்த விக்கெட் அவுட்?”… அதிமுகவை காலி செய்யும் ‘தவெக’.. அலறும் எடப்பாடி படை….!

அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை…

12 minutes ago

FLASH NEWS: வங்கக்கடலில் புயல் சின்னம்…. 40-50 கிமீ வேகத்தில்…. தமிழகத்தில் பொளந்துக்கட்டப்போகும் கனமழை…. வந்தது அலெர்ட்….!

வங்கக்கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்…

20 minutes ago

“திமுகவுடன் ரகசிய கூட்டணி?”… EPS-க்கு எதிராக போர்க்கொடி.. பரபரப்பு கடிதம்… அதிமுக முக்கிய புள்ளிகள் உடைத்த ரகசியம்…!

அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

44 minutes ago

குடும்பத்தலைவிகளுக்கு ஷாக்…. மகளிர் உரிமைத்தொகையில் இருந்து 19 லட்சம் பேர் நீக்கம்… அதிகாரிகளுக்கு பறந்த ரகசிய உத்தரவு…!

மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்தின் போது, 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளை அதிலிருந்து நீக்கி, முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ்…

49 minutes ago

“35 நொடிகளில் 10 உதை…. நோயாளிக்கு நேர்ந்த கொடூரம்”…. ஹாஸ்பிடல் ஊழியர் செய்த அந்த ஒரு செயல்… வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ….!

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், பெண் ஊழியர் ஒருவர் நோயாளி ஒருவரைத் தொடர்ச்சியாக எட்டி…

56 minutes ago